செவ்வாய், 2 ஜனவரி, 2018

பருவத்தே பயிர் செய்.

🌸 பருவத்தே பயிர் செய்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)


22. பருவத்தே பயிர் செய் :

ஒவ்வொரு செயலுக்கும் அதைச் செய்ய குறிப்பிட்ட காலமுண்டு.
எனவே எந்த ஒரு செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய கவனமாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Bible இலிருந்த இந்தப் பகுதி இங்கு மிகப் பொருத்தமானது :


வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.

பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு.

கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு.

நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு.

அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு.

புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு.

கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு.

தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு.

தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு.

காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு.

கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு.

மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.

சினேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு.

யுத்தம் பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.

பருவத்தே பயிர் செய் :


ஒவ்வொரு பயிரும் அதிக மகசூலைப் பெறுவதற்கு அதற்கு ஏற்ற உகந்த பருவ சூழலில் விவசாயம்  செய்தால்தான் சிறந்த விளைச்சல் கைகூடி வரும். உழைப்புக்குப் பலன் கிட்டும்.

இவ்வாறு வாழ்க்கையின் ஒவ்வொரு வயதிலும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உள்ளது. அந்த வயதில் அந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற அலட்சியம் செய்தால் பிற்கால வாழ்வில் அதற்காக மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். சில தவற விடப்பட்ட வாய்ப்புகளை எத்தனை சிரமப்பட்டு முயற்சித்தாலும் போனது போனதுதான்.

எனவே எந்த வயதில் எதைச் செய்ய வேண்டும் என்கிற தெளிவு வேண்டும்.

இளமையிலே கல்வி கற்றுக்கொள்ள முழு கவனம் செலுத்த வேண்டும்.
உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
உணவு, உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம், வருமானம், சேமிப்பு  குறித்து
ஒவ்வொரு வயதுக்கு ஏற்றவாறு சரியான திட்டமிடுதல் வேண்டும்.

வாழ்க்கை கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் கற்பது.

வேதங்கள்  வாழ்க்கையின் பிரச்சினைகளுக்காக  கவலைப்படக்கூடாது எனச் சொல்கிறது. அதைக் குறித்து பயப்படாதேயுங்கள் என்றும் அறிவுறுத்துகிறது.

ஆனால் எப்போதும் வாழ்க்கையை சரியாகத் திட்டமிட்டு விழிப்புணர்வுடன் வாழுங்கள் என அறிவுறுத்துகிறது.

இதிகாசங்களின் கதாப்பாத்திரங்கள் எவற்றை வாழ்க்கையில் செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்று  உணர்த்தப் பயன்படுகிறது. ,

இன்று எந்த வயதில்  நாம் இருந்தாலும்  நமக்கிருக்கும்  வாய்ப்புகள், வலிமை கொண்டு மீதமிருக்கும் காலத்தில் எங்கனம் சிறப்பாக பயனுள்ளதாக வாழமுடியும் என்று திட்டமிடுதல் நல்லது.

2 கருத்துகள்: