மேலாண்மை/ஊக்கமூட்டுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேலாண்மை/ஊக்கமூட்டுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 அக்டோபர், 2023

விழுமங்கள்

விழுமங்கள் (Ethical Values).

அறம் சார்ந்த விழுமங்கள் எனக் கருதப்படுபவை சமரசம் செய்து கொள்ள முடியாத, விவாதிக்க முடியாத, மாறாத உண்மைகளாகும். அவைகள் நாம் நடந்து கொள்ளும் விதத்தைத் தீர்மானித்து, நம்மை இயக்கும் ஆற்றல் மிக்கவை.

அவை ஊக்கமளிப்பவையும் கூட. நாம் ஒரு செயலை செய்யும் விதம், நாம் நடந்து கொள்ளும் முறை ஆகியவற்றிற்கு நமது விழுமங்களே பொறுப்பு; அத்துடன் அவை நம்மைக் கட்டுப்படுத்துபவை - அதாவது அவை நாம் நடந்து கொள்ளும் விதத்திற்கு  எல்லைகளை வைக்கின்றன.

ஒரு தலைமை பொறுப்பை  நீண்ட காலத்திற்கு நிர்வகிக்கத் தேவையான, செயல்திறனுக்கு, அவர்களது நிலையான விழுமங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என இன்றைய தலைமைத்துவத்தைக் குறித்த இலக்கிய நிபுணத்துவ கட்டுரைகள் உணர்ந்து, அதில் அதிக கவனம் செலுத்துகின்றன.

''குற்றமற்ற வாழ்க்கையை வாழ விரும்புபவர்'' - ''எப்போதும் இதயத்திலிருந்து உண்மையைப் பேசுபவர்" என்கிற விழுமியம் உடையவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்த நடத்தை ஆய்வுகள் (Value - Driven based behavior's), சில தகவல்களை விவரிக்கிறது.

இவர்கள் தங்கள் இதயத்தில் சத்தியத்தின்  வலிமையை மதிப்பதால், அவர்களது வார்த்தைகள் உண்மையை வெளிப்படுத்துகின்றன.

அவர்கள் கருணையை மதிப்பதால், "தன்னை சுற்றி வாழ்பவருக்கு எதிராக எந்த சூழ்நிலையிலும் தவறு இழைப்பதில்லை".

அவர்கள் நேர்மையை மதிப்பதால், ''எத்தகைய இழப்பை எதிர் கொள்ள நேரிட்டாலும்'' தாங்கள் சொன்ன வார்த்தையின்படி நடக்கிறார்கள்.

அவர்கள் நீதியை மதிப்பதால் "அப்பாவிகளுக்கு எதிராகச் செயல்படுவதற்கு''  கைக்கூலி வாங்குவதில்லை.

இத்தகைய விழுமியங்களைப் பின்பற்றுவதால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

தெய்வீக அறம் சார்ந்த விழுமியங்களால் உந்தப்பட்டு வழி நடத்தப்படும் தலைவர்கள் இறைவனிடமிருந்து மகத்தான சக்தியைப் பெறுகிறார்கள். அவர்கள் "எந்த சூழ் நிலையிலும் மனதால் கலங்குவதில்லை". அவர்களைச் சுற்றி என்ன நிகழ்வுகள் நடந்தாலும், முழு நம்பிக்கையுடன் அவர்களால் வாழ முடிகிறது.

அவர்கள் மதிப்பு மிக்கவை எனக் கருதும் விழுமியங்கள், அறம் சார்ந்த கொள்கைகளால் வடிவமைக்கப்பட்டவை. ஆகவே அவர்கள் சரியான முடிவுகளை எடுப்பதற்கு அவைகள் வழி காட்டுகின்றன. இத்தகைய நம்பிக்கை உணர்ச்சிவசப்படாத ஒரு ஆன்மீக ஸ்திரத்தன்மையை அவர்களுக்குக் கொடுக்கும். அவ்விதம் இருந்தவர்கள் மிகச் சிறந்த தலைவர்களாக இருந்ததை உலக வரலாறும் உறுதிப்படுத்துகிறது. 

நீங்கள் இதைப் பற்றிச் சிந்திக்கும்போது, உங்களை ​​எந்த விதமான விழுமியங்கள் வழி நடத்துகின்றன?

உங்கள் சொந்த வாழ்க்கையை நீங்கள் ஆராயும்போது, ​​உங்கள் நடத்தைக்கு உந்துதலாக எத்தகைய மதிப்புகள் இருக்கின்றது?

நீங்கள் நடந்து கொள்ளும்விதம் சிறப்பாக இருக்க  எந்த விதமான விழுமியங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தெய்வீக அறம் சார்ந்த விழுமியங்களை முழுமையாக ஒருங்கிணைப்பதை உங்கள் இலக்காக ஆக்குங்கள். வாழ்வில் வெற்றி உறுதி.


படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்..

 

ஞாயிறு, 28 மே, 2023

மறுரூபம்.

 வாழ்க்கையை மேம்படுத்தி வடிவமைக்க உதவும்  20 - பழக்கங்கள்.


01. ஒவ்வொரு நாளையும் நன்றியுடன் தொடங்குங்கள்.

சிறிய விஷயங்களையும் நன்றியுடன் நினைவு கூறுங்கள். அதைப் பாராட்டுவதற்குச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். நேர்மறையான மனப்பாங்கோடு இந்த நாளை எதிர் கொள்ளவும்.

02. அனுதினம்: சுய-மதிப்பிடு பயிற்சி.

உங்கள் சாதனைகள், சவால்கள், மற்றும் கற்றுக்கொண்ட அனுபவ பாடங்கள்; இவற்றை அனுதினம் ஆராய்ந்து மதிப்பிடுவதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். 

  • விழிப்புணர்வு, 
  • நீங்கள் நடக்க வேண்டிய பாதை,
  • உங்கள் வளர்ச்சிக்கு உத்வேகம் தரும் தரிசனம்                                                           
ஆகியவற்றை இது வளர்க்கிறது.

03.  கவனமாகக் கேட்கும் கலையில் நிபுணத்துவம் பெறுங்கள்.

மற்றவர்களது உள்ளக் கிடக்கை உண்மையாகவே உணரும் வகையில் கேளுங்கள். அவர்கள் வெளிப்படுத்தும் கோணத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இது தொடர்பை வளர்க்கிறது. ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது. 

ஆகத் தொடர்புகொள்பவரின் "உண்மையான நோக்கம்" என்ன என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் கேளுங்கள்.

04. வளர்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சவால்களை எதிர் கொள்ளுங்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். பின்னடைவுகளை எதிர்கொண்டாலும் விடாப்பிடியாகத் தொடருங்கள். நீங்கள் வலியை உணரவில்லை என்றால், வளரவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. சுய-பராமரிப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்.

உங்கள் மனம், உடல், ஆன்மா; இவற்றிற்குப் புத்துணர்வு அளிக்கும் செயல்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள். ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு இது மிக அவசியம்.

06. இணைய உலா: ஆரோக்கியம் - மனவளம் - கவனம் தேவை.

தொடுதிரை நேரத்திற்கான எல்லைகளை வரையறுக்கவும். இணையத்திற்கு வெளியே நிகழும் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளியுங்கள். 

உண்மையான வாழ்க்கை - இணைய உலகம்: இவ் இரண்டிற்கும் இடையே ஆரோக்கியமான சமநிலையைப் பராமரிக்கவும்.

07. வளமான வாழ்க்கை முறையை நோக்கி சிறிய அடிகளை எடுங்கள்.

உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவுத் தேர்வு உங்கள் அனுதின இயல்பு வாழ்க்கை வழக்கமாக இருக்கட்டும். ஒரு நாளில் ஒரு முறையாவது!!!

08. மனவளப் பயிற்சி.

நிகழ்காலத் தருணத்தில் முழுமையாக இருங்கள். தீர்ப்பளிக்கும் மன நிலையிலிருந்து விடுபடுங்கள். அது தெளிவைக் கொண்டு வருகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. 

உங்கள் மனதில் ஓடும் கதைகளை உணர்ந்து கொள்ள விழிப்புடன் இருங்கள்.

09. தொடர்பு வலைப்பின்னலைப் பேணுங்கள்.

உங்கள் துறையில் உள்ள நிபுணர்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குங்கள். நேரம் ஒதுக்கி உதவி வழங்கத் தயாராக இருங்கள். 

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: தொடர்பு வலைப்பின்னலது வருமானம் பேராசை அல்ல, பெருந்தன்மை.

10. வழிகாட்டுதலை நாடுங்கள்.

உங்களுக்கு முன் அதே பாதையில் நடந்தவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

"வழிகாட்டி என்பவர், உங்களுக்குள் மறைந்திருக்கும் அதீத திறமை மற்றும் திறனை, நீங்கள் கண்டு உணர்வதை விட, மிகத் தெளிவாகக் காண்பவர்.  உங்களிடமிருந்து அதை வெளியே கொண்டு வர உதவுபவர்." - Bob Proctor.

11. அர்த்தமுள்ள உறவுகளை வளர்ப்பது அவசியம்.

உங்களது உயர்வை நாடும் நபர்களைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையை வளப்படுத்த உதவும் உண்மையான தொடர்புகளை உருவாக்க முயலுங்கள். அதைப் பராமரிப்பதற்குத் தேவைப்படும் முயற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். இவை முதலீடு.

12. நிதி வளர்ச்சி கவனம் தேவை.

செல்வத்தை உருவாக்குதல், பல வழிகளில் வருமானத்தை உருவாக்கும் வழிமுறைகள் கண்டறிதல் மற்றும் நிலையான முதலீடு செய்தல் ஆகியவற்றை கற்றுக் கொள்ளுங்கள்.

13. விமர்சன கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் வளர்ச்சியை உயர்த்துவதற்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும் சக ஊழியர்கள், வழிகாட்டிகள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் இருந்து வரும் விமரிசன கருத்துக்களைக் கூர்ந்து கவனிக்க ஆர்வமாக இருக்கவும். 

நினைவில் கொள்ளுங்கள்: விமரிசன கருத்து என்பது வெற்றி வீரர்களின் காலை உணவு.

14. தொடர்ந்து கற்றல்: நேசியுங்கள்.

உங்கள் அறிவை விரிவுபடுத்தவும், புதிய திறன்களைப் பெறவும் வாய்ப்புகளைத் தேடுங்கள். இது உங்களை எந்த சூழலுக்கும் பொருத்தமானவராகவும், உகந்தவராகவும் வைத்திருக்க உதவுகிறது. 

குறிப்பு: கற்றலை நிறுத்தும் எவரும் தேக்கமடைந்து வளர்வதை நிறுத்துவர்.

15. நிபுணத்துவத்தை உள்ளடக்குங்கள்.
  • ஒரு வலுவான பணி நெறிமுறையைக் கடைப்பிடிக்கவும். 
  • திறம்படத் தொடர்பு கொள்ளவும். 
  • சிறந்த முடிவுகளை வழங்கவும்.
16. உங்கள் பாதுகாப்பு மண்டலத்தை விட்டு வெளியே வாருங்கள்.

உங்கள் எல்லைகளைத் தாண்டி புதிய சவால்களை ஏற்றுக் கொள்ளும்போது தான் வளர்ச்சி ஏற்படும். உங்கள் பாதுகாப்பு மண்டலத்திலிருந்து வெளியே வராத வரை, உங்கள் வாழ்க்கையை, நீங்கள் ஒருபோதும் மேம்படுத்த முடியாது.

நினைவில் கொள்ளுங்கள்: உங்கள் பாதுகாப்பு மண்டலத்திற்கு வெளியே மாற்றம் தொடங்குகிறது.

17. அழகிய தருணங்களைத் தினசரி ஏட்டில் பதிவு செய்யுங்கள்.

பதிவுகள் மனதின் ரகசியங்களைத் திறந்து பார்க்க உதவுகிறது. சுய-மதிப்பிடு திறனை வளர்க்கிறது. தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நன்றி உணர்வை வெளிப்படுத்த உதவுகிறது. திறந்த மனநிலைக்கு வழிவகுக்கிறது. 

பதிவுகளைத் தொடர்ந்து எழுதிப் பயிற்சி செய்வது மிகச் சக்தி வாய்ந்தது.

18. சமூகத்திற்குத் திருப்பி தாருங்கள்.

தன்னார்வலர், வழிகாட்டி, உங்கள் இதயத்திற்கு நெருக்கமானவற்றை ஆதரித்தல்..,  ஏதோ ஒரு வகையில் நீங்கள் பெற்றதை இந்த சமூகத்திற்குத் திருப்பிக் கொடுங்கள்.

அன்புடன் செய்யும் சிறிய கருணை செயல்கள், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

19. முன்னேற்றத்தைக் கொண்டாடுங்கள்.

வளர்ச்சியைக் கொண்டாடுங்கள். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், முன்னோக்கிச் செல்லும் ஒவ்வொரு அடியும் உங்கள் அர்ப்பணிப்புக்கும் வளர்ச்சிக்கும் சான்றாகும். தொடர்ந்து பயணியுங்கள்.

20. தனித்துவத்தை உருவாக்குங்கள்.

உங்கள் நிபுணத்துவத்தை மட்டுமல்ல, உங்கள் மதிப்புகளையும் வெளிப்படுத்தும் விதமாகத் தனித்துவமான அடையாளத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் துறையில் உங்களைத் தனித்து நிற்கச் செய்கிறது.


Article taken with thanks from: 
Mr. Subramanian Narayan
OD Consultant, 
Culture Change and Business Results through Trust Building®, 
Professional Speaker, Executive Coach and Voiceover artist.



படங்கள்: இணையத்திலிருந்து நன்றியுடன்..

புதன், 19 ஏப்ரல், 2023

ஏழு ஜப்பானியக் கோட்பாடுகள்.

வாழ்வு மேம்பட..,


புதிய தரிசனங்களைக் கண்டடைய, மேம்பட்ட நிலையை அடைந்திட, உதவி செய்யும் ஏழு ஜப்பானியக் கோட்பாடுகள்.

1. Ikigai: வாழ்வின் நோக்கம்:

உங்கள் நோக்கம் என்ன?

''Ikigai'' எனும் ஜப்பானியச் சொல்லிற்கு, "நமது இருப்பிற்கான காரணம்" அல்லது "வாழ்க்கையில் நோக்கம்" எது; என ஆராய்ந்து பார்ப்பது என்று புரிந்து கொள்ளலாம். 

தினமும் காலையில் எழுந்தவுடன், இன்று என்ன செய்யப் போகிறோம் எனும் சரியான நோக்கத்தை அறிவது.

நீங்கள் எதை விரும்புகிறீர்கள், எதைச் செய்வதில் சிறந்தவர், அதனால் இந்த உலகிற்கு என்ன பயன், அதன் வழியாக வருமானம் கிடைக்குமா என்பதன் கூட்டுச் சேர்க்கை இது.



உங்கள் ''இகிகாயை'' அடையாளம் காண்பதன் மூலம், நீங்கள் பயணிக்க வேண்டிய திசையை உங்களால் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.

  • வாழ்க்கையில் உங்களுக்கான நோக்கத்தைக் கண்டறியவும்.
  • ஒவ்வொரு காலையிலும் நீங்கள் விழிப்பதற்கான சரியான காரணத்தை உறுதி செய்து கொள்ளவும். 
  • உங்கள் பலம், உணர்வுப்பூர்வமான ஈடுபாடு (Passion) இருக்கும் ஒரு பணியைத் தெரிவு செய்யவும்.
  • அது உலகத்தின் தேவைகளுக்கு உபயோகமாக இருக்க வேண்டும்.
  • அந்த பணி, வருமானத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவ வேண்டும்.
  • அப்போது வாழ்க்கை அர்த்தம் அடைகிறது.

2. Shikata ga nai: மாற்ற இயலாதவை:

''Shikata ga nai'' என்பதற்கு, "அதற்கு மேல் அதை ஒன்றும் செய்ய முடியாது" அல்லது "இதற்கு எந்த மாற்று வழியும் இல்லை" என்று பொருள்.

இது நம்மால் மாற்ற முடியாத துன்பங்களை எதிர்கொள்வது, அவற்றை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றை வலியுறுத்துகிறது. 

ஆனால், இது பொறுப்புகளைத் துறந்து தப்பி ஓடுவது அல்ல. 

சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக் கொள்வது. 

அத்துடன், அதை ஏற்றுக் கொண்டு, அச் சூழலைக் கடந்து, முன்னேறுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பது.

  • உங்களால் மாற்றமுடியாத மனிதர்கள், விஷயங்களை விட்டு விடுங்கள்.
  • சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 
  • அதனால் குறையொன்றுமில்லை. வருத்தப்பட வேண்டிய அவசியமுமில்லை.
  • உங்களால் கட்டுப்படுத்தக் கூடியதைத் திறம்பட நிர்வகியுங்கள். 
  • உங்களால் எதைச் சிறப்பாக மாற்றி அமைக்க முடியுமோ, அவற்றில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேறுங்கள்.

3. Wabi-Sabi: குறைகளில் வசீகரம்:


இந்த கருத்து, முழுமை அற்றதில் உள்ள அழகியல் (beauty of imperfection), நிலையற்ற தன்மை (transience) மற்றும் இயற்கை உலகின் படைப்புகள், ஆகியவற்றை அவை இருக்கும் வண்ணமாகவே ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை (attitude)  குறிப்பிடுகிறது.

இது, ஆபூரண (imperfect), முழுமையற்ற (incomplete) மற்றும் கடந்து செல்லும் நிலையற்றவற்றில்  (transience)  உள்ள அழகைக் கண்டறிவது.

வாழ்க்கையின் எளிமையான, அலங்காரமற்ற மற்றும் இயற்கையான கூறுகளை மதித்து, அவற்றைப் பாராட்ட ''வாபி-சபி'' நம்மை ஊக்குவிக்கிறது.


Wabi Sabi

  • அபூரணத்தில் அமைதியைக் கண்டறியவும்.
  • வாழ்க்கையில் எதுவுமே பரிபூரணமானதல்ல என்பதை உணருங்கள். இதில் நாம் அனைவரும் அடக்கம்.
  • எதுவும் நிலையற்றது; நிரந்தரமற்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • குறையற்ற தன்மை அடைய வேண்டும் எனப் பாடுபடுவதற்குப் பதிலாக, வாழ்க்கையைத் தனித்துவமாக்கும் குறைபாடுகளில் மகிழ்ச்சியைக் காணவும்.

4. Gaman: எதிர்வினை: 


"காமன்'' என்பது கடினமான சூழ்நிலைகளிலும் கூட விட்டுக்கொடுக்காமல் வலுவாக இருப்பது. 

சகிக்க முடியாத சூழலில், அதைப் பொறுமையுடன் கண்ணியத்தை விட்டுக் கொடுக்காமல் எதிர் கொள்வது என்றும் புரிந்து கொள்ளலாம். 

“Between stimulus and response there is a space. In that space is our power to choose our response. In our response lies our growth and our freedom."  - Viktor E. Frankl. (in his book Man's Search for Meaning).

"பிறர் தூண்டுதல் மற்றும் அதற்கு நாம் ஆற்றும் எதிர்வினை இவற்றிற்கு இடையே ஒரு சிறு கால இடைவெளி உள்ளது. அந்த நேரத்தில், நமது மிகச் சிறந்த பதிலைத் தேர்ந்தெடுப்பதுவே சக்தி. அந்தப் பதிலில் தான் நமது வளர்ச்சியும் சுதந்திரமும் இருக்கிறது." - Viktor E. Frankl.

இந்த கோட்பாடு, கஷ்டங்கள் அல்லது துன்பங்களை எதிர்கொள்வதில் சோர்வுறாது, விடாமுயற்சியுடன் தொடர வேண்டும் என கற்றுத் தருகிறது. 

அத்துடன் பின்னடைவை வலிமையாக எதிர் கொள்வது மற்றும் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

இதன் மூலம், உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும், உங்களை வழி நடத்தும் மன வலிமை மற்றும் தைரிய உணர்வை வளர்த்துக் கொள்ளலாம்.
  • கடினமான சூழ்நிலைகளில், நீங்கள் எப்படி எதிர்வினை ஆற்றுகிறீர்கள் என்பதைக் கவனித்து, தேவையெனில் கட்டுப்படுத்தவும்.
  • நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, பொறுமையுடனும் அணுகவும்.
  • உங்கள் கண்ணியத்தைப் பாதுகாக்கவும்.
  • வெட்கத்தை எதிர்கொண்டாலும், உணர்ச்சிவசப்படாமல், முதிர்ச்சியையும், சுயக்கட்டுப்பாட்டையும் உங்கள் நடத்தையில் வெளிப்படுத்தவும்.
  • நினைவில் கொள்ளுங்கள்; உங்கள் அணுகுமுறையையும், நீங்கள் பதில் சொல்லும் விதத்தையும் உங்களால் கட்டுப்படுத்த முடியும்.
  • பொறுமை, மீண்டு எழும் உத்வேகம், புரிந்து கொள்ளும் திறன், இவற்றை எப்போதும் விட்டு விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. Oubaitori: தனித்துவம்:


இது ஒரு ஜப்பானிய பழமொழியாகும். வசந்த கால மரங்களில் பூக்கும் செர்ரி, பிளம், ஆப்ரிகாட் மற்றும் பீச் ஆகிய நான்கு மரங்களின் வேறுபட்ட தன்மையிலிருந்து உருவான கருத்தாக்கம். 

நீங்கள் ஒருபோதும் உங்களை வேறொருவருடன் ஒப்பிடக் கூடாது. அதற்கு அவசியம் இல்லை என்பது அதன் சாரம்சம். 

ஒவ்வொரு பூவும் அதன் சொந்த நேரத்தில் பூக்கும். அவை ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. அதுபோல, ஒவ்வொரு நபரும் தனது சொந்த பாதையைத் தீர்மானித்து, உத்வேகம் பெற்று,
தமது பயணத்தைத் தொடர வேண்டும்.

  • உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். 
  • ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காலவரிசை மற்றும் தனித்துவமான பாதை உள்ளது.
  • மற்றவர்களுடன் ஒப்பிட்டு உங்களை அளவிட முயல்வதை விட, உங்கள் சொந்த முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி, உங்களது பாதையில் பயணிப்பது முக்கியம்.

6. Kaizen: தொடர் மேம்பாடு:


"கைசென்"  என்றால், "தொடர்ந்து முன்னேறுதல்" என்று பொருள்.

இது தனிப்பட்ட வளர்ச்சி முதல் அலுவலக செயல்பாடுகள் வரை, உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும், நீங்கள் அடைய விரும்பும் நீண்ட கால முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், சிறு, சிறு மாற்றங்கள் அல்லது நிலையான மேம்பாடுகளைத் தொடர்ந்து செய்வதன் வழியாகச் சாதிக்க முடியும் எனும் கருத்தாக்கம்.
  • நீங்கள் மேம்படுத்த விரும்பும் பல பகுதிகளைக் கண்டறியவும்.
  • ஒரே நேரத்தில் அவற்றில் பெரிய மாற்றங்களை அடைய முயல்வதை விட, முக்கியமாக அடைய வேண்டிய ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
  • உங்கள் இலக்குகளைச் சிறிதாகவும், நிறைவேற்றக்கூடிய சிறு, சிறு செயல்களாகவும் பிரித்துக் கொள்ளுங்கள்.
  •  அவற்றில் தொடர்ந்து கவனமாக ஈடுபட்டு அச் செயல்களை முடியுங்கள். 
  • அடையும் வெற்றிகளைக் கொண்டாடி, அவற்றைத் தொடர் உந்துதலாகப்  பயன்படுத்தி, உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் முன்னேற முயலுங்கள். 
  •  சிறிய மாற்றங்கள் கூட காலப்போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

7. Shu-Ha-Ri: கற்றுக்கொள் - பரிசோதித்து பார் - சிகரம் தொடு.

Shu-Ha-Ri என்பது தொழில், கல்வி மற்றும் தனிப்பட்ட மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய தற்காப்புக் கலைக் கருத்தாகும். 

இது ஒரு நுட்பத்தை எவ்வாறு கற்றுக்கொள்வது, அதில் எவ்விதம் தேர்ச்சி அடைவது, அதன் உன்னத நிலையை அடையும் வழிமுறைகள் பற்றிய பல்வேறு  நிலைகளைக் குறிக்கிறது.

Shu-Ha-Ri மூலம், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை வளர்க்கக் கூடும். அதே வேளையில் நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சிறப்பான தேர்ச்சியும் பெறலாம். 

அந்த உன்னத ஞானத்தை அடைவதற்கு மூன்று அறிவு நிலைகள் உள்ளன. 

1.  Shu: Follow the Rules: விதிகளைப் பின்பற்றவும்:

முதல் நிலையில், ஒருவர் தனது சொந்த வழிமுறை அல்லது அணுகுமுறையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக, பாரம்பரியத்தைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும், மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் உணர வேண்டும். 
  • இது ஒரு குருவின் போதனையைப் பின்பற்றுவதன் மூலம் அடிப்படை உபதேசங்களைக் கற்றுக்கொள்ளுதல். 
  • மகா குருக்களைப் பிரதிபலிப்பதும் இந்த கட்டத்தில் நிகழ்கிறது.
2. HA: Break the Rules: விதிகளை உடைக்கவும்:

இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட திறன் அல்லது துறையின் அடிப்படைகளை கற்று தேர்ச்சி பெறுவது. 

ஓர் உறுதியான அடித்தளத்தை பெற்றவுடன், புதிய அணுகுமுறைகள் மற்றும் மேம்படுத்தும் யோசனைகளை பரிசோதித்து ஆராயத் தொடங்குவது. 
  • குருவிடமிருந்து கற்று தேர்ச்சி பெறுதல்.
  • அதை  ஒருங்கிணைத்து பயிற்சி செய்தல்.
  • மேம்படுத்த புதிய வழி முறைகளை ஆராய்தல்.
3. RiTranscend the Rules: உங்கள் சொந்த விதிகளை உருவாக்கவும்:

இறுதியாக, நீங்கள் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில், உங்களுடைய தனித்துவமான பாணி அல்லது அணுகுமுறையை உருவாக்குங்கள். 

இந்த நிலை, நீங்கள் கற்றதைப் பல வகைப்பட்ட மாணவர்களும், பயன் படுத்தும் விதமாக, புதிய யுக்தியை உருவாக்கும் திறனை மையமாகக் கொண்டுள்ளது.
  • மாணவர் தயாராக இருக்கும்போது ஆசிரியர் தோன்றுவார். மாணவர் உண்மையிலேயே ஆயத்தமாக இருக்கும் போது ஆசிரியர் மறைந்து விடுவார். -Tao Te Ching.

படங்கள்: இணையத்திலிருந்து நன்றியுடன்..

சனி, 24 செப்டம்பர், 2022

மனதில் உறுதி வேண்டும்.

மனம் வலிமை அடைய உதவும் 

8 - பழக்கங்கள்

(Eight habits that help become mentally strong.) 



புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக வேலை செய்யும் சூழல் அடிக்கடி மாற்றம் பெறுகிறதுபல சமயங்களில் கஷ்டப்பட்டு உழைத்தாலும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடிவதில்லை. உடன் பணிபுரிபவர்களுடன் உறவுகளைப் பேணுவதும் கடினமாக இருக்கிறது.

அத்துடன் அன்றாடக் குடும்பத் தேவைகள் பாரமாக அழுத்துகிறது. அனுதினம் பல எதிர்பாராத நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. வாழ்க்கை எளிமையாக இல்லை. அது ஒரு சவாலாக இருக்கிறது. பலருக்கும் இந்த சவாலைச் சந்திக்கத் தயக்கம். போட்டியை எதிர் கொள்ளப் பயம். தோல்வியைக் கையாள இயலாத நிலைஇது விரக்தியை ஏற்படுத்துகிறது.

இந்தச் சூழலை எதிர் கொள்ள மன வலிமை தேவை. வெற்றி பெறுவதற்கு நம் மீதும், நமது திறன்களின் மீதும் நம்பிக்கை வைத்து, இழந்த மன உறுதியை மீட்டெடுப்பது மிகவும் முக்கியம். பிறக்கும் போதே தைரியம், தன்னம்பிக்கை ஒட்டிக் கொண்டு யாரும் பிறப்பதில்லை. அதற்காக அர்ப்பணிப்புடன் நேரம் ஒதுக்கி முயற்சி செய்தால் இந்தப் பண்புகளை வளர்த்துக் கொள்ள முடியும்

இந்த கட்டுரை மனம் வலிமை பெற உதவும் 8  பண்புகளைக் குறிப்பிடுகிறது. 

குறிப்பாக நீங்கள் பணியிடத்தில் மனரீதியாக வலுவாகவும், சுயச்சார்பு உடையவராக்கவும் வளர இந்த பண்புகள் உதவலாம்.

1. சுய கட்டுப்பாடு அவசியம் -(Engage in self-discipline): 

வெற்றிகரமாகச் செயல் புரிவதற்கு ஓர் ஒழுங்கு முறையில் செயல் புரிவது அவசியம் (Organized). வெற்றிகரமான நபர்கள் தங்கள் வேலையைச் சரியாகப் புரிந்து கொள்வார்கள். அந்தப் பணியை முழுமையாக முடிக்கும் வரை அவர்கள் கவனம் சிதறாது (Concentration). எதையும் அலட்சியமாக அல்லது அரை குறையாகச் செய்ய மாட்டார்கள்.

அடுத்ததாக, பணியில் ஏற்படும் தோல்விக்கு மற்றவர்களைக் குறை கூறி தப்பிக்கக் கூடாது. பிறர் மீது எளிதாகப் புகார் கூறி சில காலம் ஓட்ட முடியும். ஆனால் அது நீண்ட காலத்திற்கு உதவாதுவாழ்க்கையில் முன்னேற விரும்பினால் செயலுக்கான விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் (Responsibility).

செய்ய வேண்டிய பணிகளில்எது முதலில் செய்ய வேண்டியது, பின்னர் எவை என வரிசைப் படுத்திப் பணி புரிவது அவசியம் (Priority).

செய்ய வேண்டிய பணியின் செயல் வழி முறைகளை முன் தயாரிப்பு செய்வது அவசியம் (Preparations). ஒழுங்கு முறையுடன் பணி புரிவதைக் கவனமாகத் தொடர்ந்து பின் பற்ற வேண்டும். அது இயல்பான  பழக்கமாக மாற வேண்டும்இதனால் செய்யும் வேலையில் எதிர்பாராத தவறுகள் நிகழாது.

இவை பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்க உதவும். ஒழுங்கு முறையுடன் பணி செய்யும் பண்பை நேரம் ஒதுக்கித் தொடர் முயற்சி செய்தால் வளர்த்துக் கொள்ள முடியும். 

2. பாதுகாப்பு  வளையிலிருந்து வெளியேறவும் - (Step out of your comfort zone): 

கப்பல் துறைமுகத்தில் நிற்பது பாதுகாப்பானது தான்ஆனால் அது  அதற்காகக் கட்டப்படவில்லை

நமக்குப் பாதுகாப்பானதாக உள்ள குழுவுடன் இருப்பதால் வசதியாக உணரலாம். ஆனால் அங்குதான் நமது திறன் மற்றும் வளர்ச்சிக்குத்  தடையைப் போடுகிறோம்.

இதன் விளைவாக நமக்குப் பழக்கமில்லாத  சூழ்நிலை அல்லது  ஒரு பணி கொடுக்கப் படும் போது அப்படிப்பட்ட திடீர் நிகழ்வை எதிர் கொள்ள முடியாமல் தவிக்க நேரிடுகிறது. மனதில் ஒரு பாரம் ஏற்படுகிறது. அதைக் கையாள முடியாமல் தோல்வி அடைய நேரிடுகிறது.

இதற்குத் தீர்வு, நம்மைப் பயமுறுத்தும் சிறிய விஷயங்களைச் செய்வது. அங்கிருந்து தொடங்கி மனதில் நம்பிக்கையை உருவாக்குவது.  

தனியாகப் பயணம் செய்யப் பயப்படுகிறீர்கள் என்றால் முதலில் சிறிய தொலைவு பயணம் மேற்கொள்ளவும். சக ஊழியர்களுடன் வெளிப்புறப் பணிகளுக்குச் செல்லுங்கள். அலுவலக பணி முறைகளை முயற்சி செய்து கற்றுக் கொள்ளுங்கள்

முக்கிய விஷயம் என்னவென்றால், அச்சங்களை மேற்கொள்வது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் எல்லாவற்றையும் செய்யத் துணிவு பெறுவீர்கள்.

3. தவறுகளை உணர்வது தவிர்க்கக் கற்பது - (Realize your mistakes and find ways to improve) 

வெற்றிகரமாக வளர உதவும் மற்றொரு பழக்கம்  தவறுகளைப் பகுப்பாய்வு செய்வதாகும்சில நேரங்களில் தவறு நிகழ்வது தவிர்க்க முடியாதுஆனால் அவற்றுக்கான நமது  எதிர்வினை தான் மிக முக்கியம். 

தவறுகளின் பின் விளைவுகளைக் கண்டு பயந்து ஓடி ஒளிவது அல்லது அதை மறைப்பது பலவீனத்தையே தரும். எந்த இடத்தில் தவறு செய்கிறோம் எனப் புரிந்து கொள்ளவில்லை என்றால் மீண்டும் அதே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்ய நேரிடும். இறுதியில் தன்னம்பிக்கையை இழப்போம்எனவே தவறு நிகழ்ந்த ஒவ்வொரு சூழ்நிலையையும் கவனமாக உங்கள் பார்வையிலிருந்து ஆராய்ந்து பாருங்கள்.

எதனால் தவறு நிகழ்கிறது, அது எங்கிருந்து தொடங்குகிறது என்பதைக் கண்டறிய முயலவும். அதனால் அடுத்த முறை அதே போன்றதொரு சூழ்நிலையை எதிர் கொள்ளும் போது எப்படி செயல் புரிய வேண்டும் என அதிக நிச்சயமாகத் தெரியும். இது புத்தியுடன்  நடந்து கொள்ள உதவுகிறது.

4. ‘இல்லைஎன்று சொல்லிப் பழகுங்கள் - (Practice saying ‘NO’):

'இல்லை' என்று சொல்வது' எளிதானது போலத் தோன்றினாலும் சில சூழ்நிலைகளில் அது மிகக் கடினமானதுகுறிப்பாக உங்கள் மேலதிகாரியின் கருத்தை மறுப்பது எளிதானதல்ல. நீங்கள் புதிதாக பணியில் சேர்ந்தவர் அல்லது இளகிய மனம் படைத்தவராக இருந்தால் இல்லை என்று சொல்லத் தயங்குவீர். 

நீங்கள் எந்த வேலை செய்யச் சொன்னாலும் மறுக்கமாட்டீர்கள் எனும் உங்கள் இயலாமை விரைவில் எல்லோருக்கும் தெரிய வரும். இதன் விளைவாக, நீங்கள் செய்யத் தேவை இல்லாத பணிகள் உங்கள் மீது விழும். இது தேவையற்ற கடினமான சூழலில் உங்களைச் சிக்கித் தவிக்க வைக்கிறது. 

அதனால் மற்றவர்கள் உங்கள் நேரத்தையும், முயற்சியையும், ஆற்றலையும் பயன்படுத்தி அவர்களது தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதைக் காணலாம்.

ஒவ்வொரு முறையும் 'ஆம்' என்று சொல்வது மிகவும் ஆரோக்கியமற்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்உங்களால் முடியாதவற்றை ‘முடியாது’என்று சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. நச்சு உறவுகளிலிருந்து விலகி ஓடுங்கள் - (Distant yourself from toxic relationships):

உறவுகளில் மிக மிகக் கடினமானது சுய நல விரும்பிகளுடன் பழகுவது. அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எவரையும் பலி கொடுக்க தயங்க மாட்டார்கள். அவர்களுக்கு நன்கு நடிக்கத் தெரியும். அவர்கள் விரும்பும் சூழலைச் சுலபமாக உருவாக்கி விடுவார்கள்மிகச் சுலபமாக  மற்றவர்கள் மீது பழி சுமத்தி விடுவார்கள். இவர்கள் நச்சுத் தன்மை உடையவர்கள். இவர்களுடன் பழகுவது பாம்புடன் பழகுவதற்குச் சமம்.

நச்சுத்தன்மையுள்ளவர்களால் உங்கள் ஆற்றலை அழித்து விட முடியும்நீங்கள் அறியாத வகையில் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை  நுட்பமாக அறிந்து கொள்வார்கள். பின்னர் அவர்கள் நினைப்பதை உணர்ச்சிகரமான வகையில் ஏமாற்றி அல்லது பயமுறுத்திச் சாதித்துக் கொள்வார்கள்

அதை நீங்கள் உணரும் போது மனம் உடைந்து விடும். அதைக் கண்டு உணராமல் இருந்தது உங்கள் தவறு. அதற்காக அவர்களைக் குறை கூற முடியாது. விழிப்புடன் இருப்பது நமது பொறுப்பு.

அதைப் போல நம்முடன் நீண்ட கால தொடர்பில் உள்ள சில நபர்கள் காலப் போக்கில் நமது "தவிர்க்க முடியாத பலவீனமாக" மாறி, நம்மைப் பயன்படுத்திக் கொள்ள விரைவாகக் கற்றுக் கொள்கிறார்கள்

இத்தகைய நச்சு உறவுகள் ஏற்படுத்தும் பாதிப்பு கடுமையான மன அழுத்தத்தை உருவாக்கி விடும். பின்னர் அது நீண்ட கால துயரமாக ஆகி உங்கள் மனதில் ஆறா காயமாக மாறிவிடும். 

எனவே, உங்கள் மன அமைதிக்காக நட்பு/உறவுகளை மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்வது மிகவும் முக்கியம்நீங்கள் அதைப் புறக்கணித்தால், காலப்போக்கில் சரி செய்ய முடியாத அளவு சேதம் ஏற்பட்டு விடும். 

உங்கள் நட்பு/ உறவு வட்டத்தைச் சுத்தம் செய்வதன் மூலம், உங்கள் ஆற்றலை மேம்படுத்த முடியும்உறவுகளை வைக்க வேண்டிய தூரத்தில் வைத்தால்நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை நீங்கள் விரும்பும் வகையில் செய்திட போதுமான சுதந்திரம் உங்களுக்குக் கிடைக்கும்

6. உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்ளவும். (Learn your strengths and weakness and try to play around with it.

புத்திசாலித்தனமான மனதை உடையவர்கள் வாழ்க்கை அவர்களை நோக்கி வீசும் எந்த சவால்களையும் சந்திக்க நன்கு தயாராக உள்ளனர்

ஏனெனில் அவர்களுக்கு தங்கள் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன என்பது நன்கு தெரியும். அவற்றை தங்கள் நன்மைக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.

"என்னை யாராலும் வெல்ல முடியாது" என்று நினைப்பது முட்டாள்தனம். அத்தகைய மனநிலை உங்களை ஒரு பெரும் வீழ்ச்சிக்கு (மனதளவில்) தயார்ப் படுத்துகிறது. வீழ்ந்த பின்னர் மனதை உடைவிலிருந்து மீட்டெடுப்பது எளிதானதல்ல.

உங்கள் பலவீனங்கள் எவை என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். திரும்பத் திரும்பச் செய்யும் தவறுகள் அனைத்தும் ஆழ் மனதில் இன்பமாக  / இயலாமையாக உணர்வதால் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறதுஉங்கள் தோல்விகளைப் பகுப்பாய்வு செய்து குறை (weakness) எது என உணர்ந்தால் மட்டும் போதாதுஅதை ஏற்றுக் கொண்டு, சரி செய்யக் கற்றுக்கொண்டால் மட்டுமே சாதிக்க முடியும்.  

7. உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள் - (Keep your emotions in check):

உணர்ச்சிவசப்படுவது இயல்பானது. கட்டுப்பாடு  மிக்கவராக இருப்பதற்காக, உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் மறைக்க வேண்டாம். உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள்சில சமயங்களில், அடக்கப்பட்ட உணர்வை வெளியிடுவது மனதிற்கு நிவாரணம் தருகிறது

மனதின் காயங்களுக்கு ஆறுதல் அளிக்கவும் உதவுகிறது. மேலும் மனம் வலிமை அடைகிறதுஉள்ளத்தின் உணர்ச்சிகளை வரம்பு மீறி அடக்கும் போது முடிவு செய்யும் திறன் பாதிக்கப்படுகிறது. எதிர்வினை உணர்ச்சியற்றதாக இருக்கக்கூடாது, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் உங்களுக்கு எதிரிடையான செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். 

உண்மையில், மனரீதியாக வலிமையானவர்கள் மீண்டும் மீண்டும் எப்படி கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு மற்றவர்களை விட அதிக உணர்ச்சி வசப்படுவார்கள்

8. பெரிய சவால்களைப் பகுதிகளாகப் பிரிக்கவும் - (Break down challenges into parts) 

எப்பொழுதும் பெரிய திட்டப் பணிகள் மலைப்பாக இருக்கும். அதை முழுவதுமாகப் பார்ப்பது பயமுறுத்தலாம்

பெரும் பணிகளை முதலில் சிறு சிறு வேலையாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு சிறிய வேலைக்கும் நேரத்தை நிர்ணயிக்க வேண்டும்

அடைய வேண்டிய இலக்கை அடைவதற்குத் தேவைப்படும் கால அட்டவணைகள் உருவாக்க வேண்டும்ஒரு நேரத்தில் ஒரு பகுதியில் மட்டுமே கவனம் செலுத்தினால், நீங்கள் நீண்ட தூரம் செல்லலாம்

சிறிய வேலைக்கு ஒதுக்கப் பட்ட கால அளவில் அதை முடிப்பது எனும் திட்ட அளவில் மட்டும் கவனமாகச் செயல் புரியு வேண்டும்தீவிர முயற்சிகள், கடின உழைப்பு, நேர நிர்வாகம் செய்தால் படிப்படியாகச் சென்று இறுதி இலக்கை  அடைய முடியும்.  


Written based on the article influence with thanks: 8 habits that help become mentally strong written by Rachna : https://www.pixstory.com/story/habits-that-help-become-mentally-strong/139621

படம் இணையத்திலிருந்து நன்றியுடன் .