கவிதைகள்/மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள்/மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 நவம்பர், 2019

உன்னதத்தை நோக்கி..,

புனிதர் பிரான்சிஸ் அசிசியின் இறை வேண்டல்.


(Source : El Greco paintings - 1580)




இறைவா, 
என்னை உமது அமைதியின் கருவியாக்கும்;

எங்கே வெறுப்பு நிறைந்துள்ளதோ, 
அங்கு அன்பையும்

எங்கே மனவருத்தம் நிறைந்துள்ளதோ, 
அங்கு மன்னிப்பையும்

எங்கே சந்தேகம் நிறைந்துள்ளதோ, 
அங்கு விசுவாசத்தையும்

எங்கே அவநம்பிக்கை நிறைந்துள்ளதோ, 
அங்கு நம்பிக்கையையும்

எங்கே இருள் சூழ்ந்துள்ளதோ, 
அங்கு ஒளியையும்

எங்கே துயர் நிறைந்துள்ளதோ, 
அங்கு அகமகிழ்வையும்
விதைத்திட அருள்புரியும்.

என் இறைவா,

ஆறுதல் பெறுவதைவிட 
ஆறுதல் அளிக்கவும்

புரிந்து கொள்ளவேண்டும்
என்பதைவிடப் 
பிறரைப் புரிந்து கொள்ளவும்

அன்பு செய்யப்படுவதைவிடப் 
பிறரை அன்பு செய்யவும்

வரமருள்வாய். ஏனெனில்,

கொடுப்பதில் மூலம்தான்
பெற்றுக் கொள்ள முடியும்

மன்னிப்பதன் வழியாகத்தான்
மன்னிப்பு அடைய முடியும்

சுயத்துக்கு இறப்பதில் தான்
முடிவில்லா வாழ்வை அடைய முடியும்.

இறைவா! அப்படியே ஆவதாக.

*******   *******   *******   *******   *******

Prayer of Saint Francis of Assisi


Lord, 
make me an instrument of your peace

Where there is hatred, 
let me sow love

Where there is injury, 
pardon

Where there is doubt, 
faith

Where there is despair, 
hope

Where there is darkness, 
light

And where there is sadness, 
joy

O Divine Master, grant that I may

Not so much seek to be consoled as to console

To be understood, as to understand

To be loved, as to love

For it is in giving that we receive

And it's in pardoning that we are pardoned

And it's in dying that we are born to Eternal Life

Amen

*******   *******   *******   *******   *******

புனிதர் பிரான்ஸிஸ் அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம் :


புனித பிரான்ஸிஸ் கி.பி. 1181 ம் ஆண்டு இத்தாலியில் உள்ள அசிசி என்னுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பியேட்ரோ டி பெர்னார்டோனே (Pietro di Bernardone). அவர்  செல்வந்தரான ஒரு துணி வணிகர் ஆவார். இவரது தாயார் பிக்கா பூர்லமோ (Pica Bourlemont). பிரான்ஸிஸ் தமது இளவயதுவரை செல்வச் செழிப்புமிக்க வளமான வாழ்வு வாழ்ந்தார். 

அசிசி நகருக்கும், அருகாமை நகரான பெரூஜியா (Perugia) நகருக்கும் இடையில் நீண்ட பகையும், இடைவிடா போரும் இருந்து வந்தது. கி.பி.1201ம்  ஆண்டில் இரு நகருக்கும்  இடையில் போர் நிகழ்ந்தது. அப்போது இருபது வயதே நிறைந்த பிரான்சிஸும் படையில் சேர்ந்தார். போரில் எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார். 

சிறையிலிருந்தபோது பல துன்பங்களுக்கு ஆளானார். சிறையிலிருந்து வீடு திரும்பியபின் இவர் தம் வாழ்வுப் பாதை மெல்ல மெல்ல மாறியது. தனிமையை நாடினார். கேளிக்கைகளை வெறுத்தார். ஏழையிலும் பரம ஏழையாக விரும்பினார். இவருக்குப் புத்தி சுவாதீனம் ஏற்பட்டுவிட்டதெனத் தந்தை வீட்டில் சிறை வைத்தார்.

வீட்டைத் துறந்து மிக வறியவராக அலைந்து திரிந்தார். கி.பி. 1206 ம் ஆண்டு  அசிசி நகர்ப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த புனித தமியானோ ஆலயத்தில் இறை வேண்டல் செய்யச் சென்றார். அக்கோவில் பெரிதும் பழுதுபட்டு, பாழடைந்த நிலையிலிருந்தது. கோவிலின் உள்ளே நுழைந்த பிரான்சிசு இயேசுவின் திருச்சிலுவை முன் மண்டியிட்டு உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். 

அப்போது இயேசுவின் குரல் தெளிவாகப் பிரான்சிசின் காதுகளிலும் உள்ளத்திலும் ஒலித்தது: "பிரான்சிசு, என் வீடு பாழடைந்து கிடப்பதைப் பார்க்கிறாய் அல்லவா, எழுந்து சென்று அதைச் செப்பனிடு! 
இயேசுவே தம்மிடம் பேசுகிறார் என்பதை உணர்ந்ததும் பிரான்சிசு, "அப்படியே செய்கிறேன், ஆண்டவரே" என்று உற்சாகத்தோடு தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். முதலில் பழுதுபட்ட ஆலயத்தைச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டார். பின்பு இயேசுவின் உபதேசங்களை மக்களுக்கு அறிவிப்பதே தனது பணியென உணர்ந்தார். 

இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தின்படி எளிமையிலும் எளியவராக. வாழ்ந்தார். அவரைப் பின்பற்றிய ஆண்கள், பெண்களுக்கு எனத் துறவர 
சபைகளை நிறுவினார். 
கி.பி. 1226ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி இறையரசில் இனைந்தார்.

சனி, 19 அக்டோபர், 2019

இளைப்பாறல்

 ஓய்வில் மகிழ்ந்து களிகூறு 
(By William Henry Davies) 


என்ன  வாழ்க்கை இது? எங்கும் பரபரப்பில்தான் கவனம்.
நின்று நிதானித்து இரசித்து வாழத்தான்
எங்களுக்குக் கால அவகாசமில்லை.

பசும்புல்தனில் ஆடுகளும் மாடுகளும் மேய்ந்து திரியும்
அழகை மரத்தடியில் அமர்ந்து இரசிக்க நேரமில்லை.

காடுகளைக் கடந்து செல்லும்போது அணில்கள் 
தங்கள் புசித்துத் தீர்த்த பழ விதைகளைப் 
புல்லுக்குள் புதைப்பதைக் கவனிக்க நேரமில்லை.

பட்டப் பகலிலும், இரவின் நீல வான ஓடையில் 
மின்னும் நட்சத்திரங்கள் போல 
சிற்றோடையில் மின்னிச் சிதறும் ஒளிக்கற்றையின் 
பிரதிபலிப்பை இரசித்துப் பார்க்க நேரமில்லை.

இயற்கை கன்னியின் வனப்பு மிக்க  அழகிய பாதங்கள்  
நடனம் புரியும் அழகை வியந்து பார்க்க நேரமில்லை.

அவள் கண்களில் கசிந்து இதழ்களில் மலர்ந்து 
விரியும் புன்னகையை கான காத்திருக்க நேரமில்லை.

 பரபரப்பில் மட்டும் கவனம் குவிந்த 
பரிதாபம் நிறைந்த ஏழ்மை மிகு வாழ்வு இது. 
நின்று நிதானித்து இரசித்து வாழத்தான்
எங்களுக்குக் கால அவகாசமில்லை.


 *******   *******   *******    ********   *******   *******   ******* 



W.H. Daves அவர்களால் ஏழு சரணங்களில் இசையைப் போல் பாடப்பட்ட சிறு பாடல் "The Leisure ". நாம் மிகக் கவனம் நிறைந்த பராமரிப்பான வாழ்க்கை வாழ்வதாக நினைக்கிறோம். 

ஆனால் கவிஞரின் பார்வையில் இது துயரமான ஏழ்மை வாழ்க்கை.  நம்மைச் சுற்றி அமைந்துள்ள இயற்கையின் படைப்புகளின் அழகைக் கூர்ந்து கவனித்து நாம் அதை இரசிப்பதில்லை. 

ஆடு, மாடுகள் கூட அமைதியாக இளைப்பாறி புல்வெளியில் மேய்கின்றன. ஆனால் நம்மால் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓய்வை அனுபவிக்க முடிவதில்லை.


குளிர்காலத்திற்காக விதைகளை மண்ணில் புதைத்து வைக்கும் அணில்கள் நம்மை ஆச்சரியப்படுத்துவதில்லை.


இன்றைய அவசர உலகிற்கு இந்த சிறு கவிதை பரியாசமாகக் கூடத் தோன்றலாம். இது பொருத்தமற்றது, நடைமுறைக்கு ஒவ்வாதது என முடிவு செய்யக்கூடும். 


ஆனால் இந்த கவிதை கூறும் ஆலோசனைகளைக் கூர்ந்து கவனித்தால் தான் உண்மை புரியும். வேறுவிதமாகக் கூறினால், நம்மைச் சுற்றியுள்ள இயற்கைப் படைப்புகளின் அத்தனை அழகுகளையும்  மெதுவாக ரசித்துக் கவனிக்க இது கற்றுக் கொடுக்கிறது.


அவசர உலகின் அழுத்தத்திற்குள் சிக்கி மூழ்கிட வேண்டாம். கொஞ்சம் கண்களைத் திறந்து இயற்கையின் அழகை இரசிப்போம். வாருங்கள் கொஞ்சம் இளைப்பாறுவோம். 
ஆசிரியர் குறிப்பு :

                                                               William Henry Davies

மூலப்பாடல் :



  Leisure
(William Henry Davies)

What is this life if, full of care, 
We have no time to stand and stare. 

No time to stand beneath the boughs
And stare as long as sheep or cows.

No time to see, when woods we pass,
Where squirrels hide their nuts in grass.

No time to see, in broad daylight,
Streams full of stars, like skies at night.

No time to turn at Beauty’s glance,
And watch her feet, how they can dance.

No time to wait till her mouth can
Enrich that smile her eyes began.

A poor life this if, full of care,
We have no time to stand and stare.



வியாழன், 26 செப்டம்பர், 2019

உயிரின் பாடல்

வாழ்வின் சங்கீதம். 

(A Psalm of Life).


கவிதையின் சாராம்சம் :


Psalm என்பது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடும் திருப்பாடல்களைக் குறிக்கும் ஓர் சொல். கவிஞரின் பார்வையில் வாழ்க்கை என்பதும் போற்றிக்  கொண்டாடப்பட வேண்டிய ஒரு அற்புதமான சங்கீதம். 

இந்தக் கவிதை நேர்மறை எண்ணங்களின் தொகுப்பு. 

வாழ்வு இயற்கை அளிக்கும் ஒரு உயர்ந்த பொக்கிஷம். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு சாதனை புரிய வேண்டும் என்ற ஆவல் இருக்கும். வாழ்ந்ததற்கான அடையாளத்தைப் பதிக்க ஆசைப்படுவோம். 

நெஞ்சில் கனன்று கொண்டிருக்கும் இந்த நெருப்பை, தீ மூட்டிவிடும் நெருப்புப்பொறி தான் இந்தக் கவிதையின் வார்த்தைகள். 

கவிதை சொல்லும் அற்புதமான கருத்துக்கள் :

உலகம் வாய்ப்புகளால் நிறைந்துள்ளது. மானுட வாழ்வு குறுகிய கால அளவு உடையது. நேரத்தை வீணடிக்காது திறம்படச் செயல்படுவதே முக்கியம்.
புலம்பல்களை வீசியெறிந்துவிட்டு,  நேர்மையோடும், நீதியோடும் இதயத்தின் சத்தத்துக்குச் செவிமடுத்து அயராது ஒவ்வொரு கணமும் உழைத்தால் வாழ்க்கை வரலாறாக மாறும்.

வாழ்க்கை என்பது கல்லறை நோக்கிய பயணம் அல்ல. இறந்தகாலத்தின் இனிப்பான,  கசப்பான எச்சங்களும் அல்ல. எதிர்காலத்தின் ஏக்கமும் அல்ல. நிகழ்காலத்தில் திறம்பட உழைப்பது. அது அழியாததொரு தடத்தை வரலாற்றில் பதிக்கக் கிடைக்கும் அரிய வாய்ப்பு. 

உடல் அழியும். ஆனால் ஆன்மா எழுதிய கதை சிறப்பாக இருந்தால் அது என்றென்றும் நிலை நிற்கும்.

ஆசிரியர் வரலாறு :


(Henry Wadsworth Longfellow - February 27, 1807 – March  24, 1882
ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ என்பவர் ஒரு உலகப்புகழ் பெற்ற கவிஞர், கல்வியாளர் ஆவார். 

இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் இயற்கை, கலாச்சாரம், தார்மிக மதிப்பீடுகள், மக்களின் பொருள் தேடும் பயணம் முதலானவை குறித்து இருந்தன. 

புகழ்பெற்ற பிற மொழிப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தியவர். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1836-ல் ஹார்வர்டு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பேராசிரியர் பணியிலிருந்து 1853-ல் ஓய்வு பெற்று முழுநேர எழுத்துப் பணியில் ஈடுபட்டார்.

‘எ பில்கிரிமேஜ் பியாண்ட் த ஸீ’ (A Pilgrimage Beyond the Sea)  என்ற பயண நூலை 1839இல் எழுதியுள்ளார். 

பின்பு ‘வாய்சஸ் ஆப் த நைட்’ (Voices of the Night) என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 

இதைத் தொடர்ந்து ‘தி வில்லேஜ் ஆஃப் பிளாக்ஸ்மித்’, ( The Vilage of Blacksmith),  ‘த ரெக் ஆஃப் த ஹெஸ்பெரஸ்’ (The Wreck of the Hesperus), உள்ளிட்ட இவரது கவிதைத் தொகுப்புகள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றன. 

ஐரோப்பா, ஆசியா, அரேபிய நாடுகளை சேர்ந்த பல புகழ்பெற்ற கவிதைகளைத் தொகுத்து 31 தொகுதிகளாக ‘போயம்ஸ் ஆஃப் பிளேசஸ்’ (Poems of Places) என்ற பெயரில் 1874-ல் வெளியிட்டார்.
1861-ல் உடையில் தீப்பற்றியதில் மனைவி இறந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு மழிக்க முடியாமல் போனதால் நீண்ட தாடி வளர்ந்தது. நாளடைவில் அதுவே அவரது அடையாளமானது. லாங்ஃபெல்லோ 75 வயதில் (1882) மறைந்தார்.
(ஆசிரியர் பற்றிய குறிப்பு தமிழ் விக்கிபீடியா வில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.)

கவிதையின் அழகு :




இக் கவிதையின் ஒவ்வொரு பத்தியிலும் முதல் மற்றும் மூன்றாம் வரிகளின் கடைசி வார்த்தை Rhyming இல் அமைந்திருக்கும். (Numbers, slumbers ; earnest,  returnest ; sorrow,  morrow...,)

அது போல்  இரண்டாம் மற்றும் நான்காம் வரிகளின் கடைசிச் சொற்கள் Rhyming ஆக இருக்கும்.(dream, seem ; goal, soul ; way, day...,)


*******   *******   *******

உயிரின் பாடல் 



நிறுத்துங்கள்! துயர் மிகுந்து புலம்பியது போதும்.
ஆன்மா மரித்து நித்திரையடைந்தது, 
வாழ்வு ஓர் வெற்றுக் கனவு, 
தோற்றமெல்லாம் மாயை 
எனும் சோக கீதங்கள் இசைத்தது போதும்.

வாழ்வு உண்மை! வாழ்வு ஊக்கம்!
வாழ்வின் இலக்கு கல்லறை அல்ல. 
மண்ணில் உருவாகி புழுதியில் புதைவது 
உடல் மட்டுமே ; ஆன்மா அல்ல.

மகிழ்ச்சியும் துயரமும் மட்டுமல்ல வாழ்வு. 
முடிவு அது அன்று ; இன்னும் கொஞ்சம், 
இன்னும் கொஞ்சம் என முன்னேறத் 
துடிக்கும் ஏக்கத்தின் தேடலால் நிரப்பு. 

வாய்ப்புகள் ஏராளம். 
நேரமோ சிறகை விரித்துப் பறக்கிறது.  
இதயம் வலிமையுடன் தைரியமாகத் துடிக்கிறது. 
இருப்பினும் மரண அச்சம் துளிர்க்கையில் 
இதயத்துடிப்பு பறையோசயின் இலயமாக இசைக்கிறது. 

உலகின் அகன்றதொரு போர்க்களத்தில் 
வாழ்க்கைப் போராட்டம் தற்காலிகம்.
இதில் ஊமையாகவோ, உந்தப்பட்டு 
வழிநடத்தப்படும் கால்நடையாகவோ வாழாதே. 
நாயகனாகப் போர் புரி.

வனப்புடன் வசப்படுத்தத் துடிக்கும் எதிர்காலம் இருக்கட்டும். 
இறந்த காலத்தின் மரித்த நினைவுகளை மரித்தவரோடு அடக்கம் செய். 
தற்கணச் சூழலில் செயலாற்று. நிகழ்காலம் மட்டும் நிஜம். 
இதயத்தின் குரலுக்குச் செவிமடு, இறைவன் அதனுள்ளே.

வரலாற்றின் சிறந்த சாதனையாளர்கள் 
நினைவூட்டுவது எல்லாம் 
நமது கதைகளும் விழுமியங்களாகட்டும்.
கடந்து செல்லும்முன் காலத்தின் மணற் பரப்பில் 
அழுத்தமான கால்தடத்தை அழியாதவாறு பதித்துவிட்டுச் செல்.


உனது தடம் புனித முத்திரையாகட்டும்.
கப்பல் உடைந்து, கடினமான பயணத்தின் 
நொறுங்கிய இதயத்துடன் தவிக்கும் மனதுக்கு 
நீ பதித்த தடங்கள் வழி காட்டட்டும். 

எழுந்திரு! இதயம் தளராது செயலாற்று. 
எந்த விதியையும் எதிர்கொள். 
இன்னும் சாதிக்க வேண்டும். 
இடைவிடாமல் தொடர்ந்து முன்னேறு. 
உழைப்பதற்கும், காத்திருப்பதற்கும் 
எப்போதும் கற்றுக்கொள்.

*******   *******   *******

மூலப் பாடல்

A Psalm of Life 

(by Henry Wadsworth Longfellow)



Tell me not, in mournful numbers,
Life is but an empty dream!
For the soul is dead that slumbers,
And things are not what they seem.
Life is real! Life is earnest!
And the grave is not its goal;
Dust thou art, to dust returnest,
Was not spoken of the soul.
Not enjoyment, and not sorrow,
Is our destined end or way;
But to act, that each to-morrow
Find us farther than to-day.
Art is long, and Time is fleeting,
And our hearts, though stout and brave,
Still, like muffled drums, are beating
Funeral marches to the grave.
In the world’s broad field of battle,
In the bivouac of Life,
Be not like dumb, driven cattle!
Be a hero in the strife!
Trust no Future, howe’er pleasant!
Let the dead Past bury its dead!
Act,—act in the living Present!
Heart within, and God o’erhead!
Lives of great men all remind us
We can make our lives sublime,
And, departing, leave behind us
Footprints on the sands of time;
Footprints, that perhaps another,
Sailing o’er life’s solemn main,
A forlorn and shipwrecked brother,
Seeing, shall take heart again.
Let us, then, be up and doing,
With a heart for any fate;
Still achieving, still pursuing,
Learn to labor and to wait.

*******   *******   *******

திங்கள், 9 செப்டம்பர், 2019

ஆம் ஆயின்

என்றால்.., (IF)



வாழ்க்கையின் ஒரு பகுதி யுத்த களம். வலி மிகுந்தது.

வாழ்க்கையில் போராட்டத்தை எதிர் கொள்ளும் போது அது உடலை (Physically) பலவீனப்படுத்துகிறது.

மனதை (Mentally) சோர்வடையச் செய்கிறது.

உணர்வை (Emotionally) கொந்தளிக்கச் செய்கிறது.

மற்றும் ஆன்மீக ரீதியில் (Spiritually) நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. 

இதைத் தவிர்க்க முடியாது. சந்தித்துத்தான் ஆக வேண்டும். 

போராட்டத்தைக் கண்டு ஓடி ஒளிவது அல்லது பிரச்சனைகளைத் தவிர்ப்பது வாழ்வை அந்த இடத்திலேயே நிறுத்திவிடும். 

அப்படி என்றால் சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது? 

இந்த உலகப்புகழ் பெற்ற கவிதை  வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ள, துயரத்தைச் சகித்துக் கொள்ள, தொடர்ந்து துன்பங்களுக்கு மேலே போரடி முன்னேறிச் செல்ல சில பண்புகளைப் பட்டியலிடுகிறது.

இந்தச் சிறப்பான பண்புகளைக் கடைப்பிடித்தால் மேன்மை நிச்சயம் என அறைகூவல் விடுக்கிறது.

அப்படி என்ன சிறந்த பண்புகள்? 

இக் கவிதை "இப்படி உங்களால் வாழ முடியுமா? " என ஓர் சவால் நிறைந்த சில பண்புகளைச் சுட்டுகிறது.

இந்த கவிதை ஊக்கமளிக்கிறது. பின்பற்ற ஓர் உதாரணத்தை வழங்குகிறது. வாழ்முறை பயிற்சி அளிக்கிறது. 

உடலின் சக்திக்குப் போஷாக்கு நிறைந்த உணவு தேவை. அதே விதமாக நல்ல வார்த்தைகளே மனவலிமைக்கு  உணவு. இக் கவிதையின் வரிகள் ஆன்மாவிற்கான ஒரு சக்தி நிறைந்த உணவு.


ஆசிரியர் குறிப்பு :




ஜோசப் இரட்யார்ட் கிப்ளிங் (Joseph Rudyard Kipling) டிசம்பர் 30 , 1865 - ஜனவரி 18, 1936) - இந்தியாவில் மும்பையில் பிறந்த ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர். 

இவர் 1907 இல் தனது 42 ஆவது வயதில் நோபல் பரிசுப் பெற்றார். மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர் இவரே.

1906 மற்றும் 1910ல் முறையே வெளியிடப்பட்ட பக் ஆஃப் பூக்ஸ் ஹில் மற்றும் ரிவார்ட்ஸ் அண்ட் ஃபேரீஸ் . அதற்குப் பிறகு “இஃப் (IF)…” என்ற கவிதை இடம் பெற்றிருந்தது. 

1995ல் பி.பி.சி நடத்திய கருத்துக் கணிப்பில், இது இங்கிலாந்தின் மிக அதிகமாக விரும்பப்படும் கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது. 

சுய கட்டுப்பாடு மற்றும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல் பற்றி விவரிக்கும் இந்த கவிதை கிப்லிங்கின் மிகப் பிரபலமான கவிதை என்பதை எந்த சந்தேகமுமின்றி சொல்லலாம்.

என்றால்..,




உங்கள் அபிமானத்தை இழந்து, சுற்றி இருப்பவர்கள் 
எல்லாம் குற்றம் சாட்டும் சூழலிலும், தலை நிமிர்ந்து தைரியமாக 
அதைச் சந்திக்கும் மனவுறுதி உனக்கு இருக்கும் என்றால்

அவர்கள் ஐயப்படுவதற்கும் இடமளித்து,
அனைவரும் உன்னைச் சந்தேகிக்கும் சூழலிலும்
நீ உன்னை நம்புவாய் என்றால்

காத்திருப்பதற்கு மனம் தளராது, 
உன்னால் காத்திருக்கக் கூடும் என்றால்

பொய்கள் பேசப்படுகிறது என அறிந்தாலும்,
அதைப் பொருட்படுத்தாது அடக்கமுடன் 
அமைதி காக்க முடியும் என்றால்

உதாசீனப்படுகையிலும் பொறுத்து, 
ஆனால் உன்னை வெறுப்பதற்கு இடமளிக்காது 
மலர்ந்த முகத்துடன் வாழ இயலும் என்றால்

அழகுமிக்க நல்லவராக முன்னிறுத்தாது,
அதி புத்திசாலித்தனமாகப் பேசாது, 
அடக்கமாக உன்னை வெளிப்படுத்த முடியும் என்றால்

கனவு காண முடிந்தாலும், அந்தக் கனவுகள்
உன்னை ஆளுகை செய்ய அனுமதிக்காது இருக்க முடியும் என்றால் 

சிந்தனை ஊற்றெடுத்துப் பொங்கினாலும், 
யோசனைகள் எல்லாம் நோக்கத்தை நோக்கியே குவியாது 
எண்ணங்களை ஒழுங்கமைக்க முடியும் என்றால்

முட்டாள்களைப் பொறியில் பிடிப்பதற்காக,
நீங்கள் பேசிய உண்மைகளைத் திரித்துப் பரப்பும்போது
அதற்காக வெகுண்டு எழாது பொறுத்துக் கொள்ளக் கூடும் என்றால்

உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து உருவாக்கப்பட்டது 
உடைத்து உருக்குலைவதைக் கண்டவுடன் கலங்காது, 
நின்று நிதானித்துத், தேய்ந்த கருவிகளைக் கொண்டானாலும் 
மீண்டும் செப்பனிடு செய்து நிலை நிறுத்த முடியும் என்றால் 

உங்கள் எல்லா வெற்றிகளும் ஒரு குவியலாகக் குவிக்கப்பட்டு 
ஸ்ருதி பிசகும் இமைப் பொழுதில் அத்துணையும் இழக்க நேரினும்,
இழந்ததை மீட்கப் பூஜ்யத்திலிருந்து மீண்டும் 
துவங்கும் மன உறுதி இருக்கும் என்றால் 

நீண்ட காலம் உழைத்து செயல்திறன் மங்கி 
இதயம், நரம்பு, இரத்த நாளங்கள் சோர்ந்து 
மன உறுதி மட்டுமே எஞ்சியிருக்கையில்,
செயல்படுங்கள் என இதயத்தைப் பார்த்து 
உத்வேகத்துடன் கட்டளையிட முடியும் என்றால் 

மிகப் பெரிய மக்கள் கூட்டத்துடன் இணக்கமாக வாழ்ந்தாலும், 
உங்கள் தனித்துவம், ஒழுக்கத்தை விட்டுக் கொடுக்காது
காத்துக் கொள்ள முடியும் என்றால் 

அரசர்களோடு உலாவரும் வாழ்க்கை வாழ்ந்தாலும், 
எளிய மனிதனோடும் உறவைப் பேண முடியும் என்றால் 

எதிரிகள் அல்லது அன்பான நண்பர்கள் எவராயினும், 
உங்களைக் காயப்படுத்த அனுமதிக்காது வாழ முடியும் என்றால் 

எல்லோரும் உங்களோடு உடனிருந்தாலும், 
ஒருவருடனும் நெருக்கமாக இருக்காது 
விலகி வாழ முடியும் என்றால் 

மன்னிக்காத தன்மை அறுபது வினாடி ஓட்ட தூரத்துக்குள் 
உங்கள் மனதை விட்டு நீங்கும்படி 
உள்ளம் பக்குவமாக இருப்பீர்கள் என்றால் 

இந்த உலகமும் அதன் 
அத்துணைப் பொருட்களும் 
உனக்கானது.

என் குழந்தையே! நீ மிகவும் சிறந்த மனிதன்.

மூலப் பாடல் :


If 

(Joseph Rudyard Kipling)

If you can keep your head when all about you
   Are losing theirs and blaming it on you,
If you can trust yourself when all men doubt you,
   But make allowance for their doubting too;
If you can wait and not be tired by waiting,
   Or being lied about, don’t deal in lies,
Or being hated, don’t give way to hating,
   And yet don’t look too good, nor talk too wise:
If you can dream—and not make dreams your master;
   If you can think—and not make thoughts your aim;
If you can meet with Triumph and Disaster
   And treat those two impostors just the same;
If you can bear to hear the truth you’ve spoken
   Twisted by knaves to make a trap for fools,
Or watch the things you gave your life to, broken,
   And stoop and build ’em up with worn-out tools:
If you can make one heap of all your winnings
   And risk it on one turn of pitch-and-toss,
And lose, and start again at your beginnings
   And never breathe a word about your loss;
If you can force your heart and nerve and sinew
   To serve your turn long after they are gone,
And so hold on when there is nothing in you
   Except the Will which says to them: ‘Hold on!’

If you can talk with crowds and keep your virtue,
   Or walk with Kings—nor lose the common touch,
If neither foes nor loving friends can hurt you,
   If all men count with you, but none too much;
If you can fill the unforgiving minute
   With sixty seconds’ worth of distance run,
Yours is the Earth and everything that’s in it,
   And—which is more—you’ll be a Man, my son!



ஆசிரியர் குறித்து மேலதிக குறிப்புகளுக்கு :  தமிழ் விக்கிப்பீடியா