படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 மே, 2023

மறுரூபம்.

 வாழ்க்கையை மேம்படுத்தி வடிவமைக்க உதவும்  20 - பழக்கங்கள்.


01. ஒவ்வொரு நாளையும் நன்றியுடன் தொடங்குங்கள்.

சிறிய விஷயங்களையும் நன்றியுடன் நினைவு கூறுங்கள். அதைப் பாராட்டுவதற்குச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். நேர்மறையான மனப்பாங்கோடு இந்த நாளை எதிர் கொள்ளவும்.

02. அனுதினம்: சுய-மதிப்பிடு பயிற்சி.

உங்கள் சாதனைகள், சவால்கள், மற்றும் கற்றுக்கொண்ட அனுபவ பாடங்கள்; இவற்றை அனுதினம் ஆராய்ந்து மதிப்பிடுவதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். 

  • விழிப்புணர்வு, 
  • நீங்கள் நடக்க வேண்டிய பாதை,
  • உங்கள் வளர்ச்சிக்கு உத்வேகம் தரும் தரிசனம்                                                           
ஆகியவற்றை இது வளர்க்கிறது.

03.  கவனமாகக் கேட்கும் கலையில் நிபுணத்துவம் பெறுங்கள்.

மற்றவர்களது உள்ளக் கிடக்கை உண்மையாகவே உணரும் வகையில் கேளுங்கள். அவர்கள் வெளிப்படுத்தும் கோணத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இது தொடர்பை வளர்க்கிறது. ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது. 

ஆகத் தொடர்புகொள்பவரின் "உண்மையான நோக்கம்" என்ன என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் கேளுங்கள்.

04. வளர்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சவால்களை எதிர் கொள்ளுங்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். பின்னடைவுகளை எதிர்கொண்டாலும் விடாப்பிடியாகத் தொடருங்கள். நீங்கள் வலியை உணரவில்லை என்றால், வளரவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. சுய-பராமரிப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்.

உங்கள் மனம், உடல், ஆன்மா; இவற்றிற்குப் புத்துணர்வு அளிக்கும் செயல்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள். ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு இது மிக அவசியம்.

06. இணைய உலா: ஆரோக்கியம் - மனவளம் - கவனம் தேவை.

தொடுதிரை நேரத்திற்கான எல்லைகளை வரையறுக்கவும். இணையத்திற்கு வெளியே நிகழும் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளியுங்கள். 

உண்மையான வாழ்க்கை - இணைய உலகம்: இவ் இரண்டிற்கும் இடையே ஆரோக்கியமான சமநிலையைப் பராமரிக்கவும்.

07. வளமான வாழ்க்கை முறையை நோக்கி சிறிய அடிகளை எடுங்கள்.

உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவுத் தேர்வு உங்கள் அனுதின இயல்பு வாழ்க்கை வழக்கமாக இருக்கட்டும். ஒரு நாளில் ஒரு முறையாவது!!!

08. மனவளப் பயிற்சி.

நிகழ்காலத் தருணத்தில் முழுமையாக இருங்கள். தீர்ப்பளிக்கும் மன நிலையிலிருந்து விடுபடுங்கள். அது தெளிவைக் கொண்டு வருகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. 

உங்கள் மனதில் ஓடும் கதைகளை உணர்ந்து கொள்ள விழிப்புடன் இருங்கள்.

09. தொடர்பு வலைப்பின்னலைப் பேணுங்கள்.

உங்கள் துறையில் உள்ள நிபுணர்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குங்கள். நேரம் ஒதுக்கி உதவி வழங்கத் தயாராக இருங்கள். 

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: தொடர்பு வலைப்பின்னலது வருமானம் பேராசை அல்ல, பெருந்தன்மை.

10. வழிகாட்டுதலை நாடுங்கள்.

உங்களுக்கு முன் அதே பாதையில் நடந்தவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

"வழிகாட்டி என்பவர், உங்களுக்குள் மறைந்திருக்கும் அதீத திறமை மற்றும் திறனை, நீங்கள் கண்டு உணர்வதை விட, மிகத் தெளிவாகக் காண்பவர்.  உங்களிடமிருந்து அதை வெளியே கொண்டு வர உதவுபவர்." - Bob Proctor.

11. அர்த்தமுள்ள உறவுகளை வளர்ப்பது அவசியம்.

உங்களது உயர்வை நாடும் நபர்களைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையை வளப்படுத்த உதவும் உண்மையான தொடர்புகளை உருவாக்க முயலுங்கள். அதைப் பராமரிப்பதற்குத் தேவைப்படும் முயற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். இவை முதலீடு.

12. நிதி வளர்ச்சி கவனம் தேவை.

செல்வத்தை உருவாக்குதல், பல வழிகளில் வருமானத்தை உருவாக்கும் வழிமுறைகள் கண்டறிதல் மற்றும் நிலையான முதலீடு செய்தல் ஆகியவற்றை கற்றுக் கொள்ளுங்கள்.

13. விமர்சன கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் வளர்ச்சியை உயர்த்துவதற்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும் சக ஊழியர்கள், வழிகாட்டிகள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் இருந்து வரும் விமரிசன கருத்துக்களைக் கூர்ந்து கவனிக்க ஆர்வமாக இருக்கவும். 

நினைவில் கொள்ளுங்கள்: விமரிசன கருத்து என்பது வெற்றி வீரர்களின் காலை உணவு.

14. தொடர்ந்து கற்றல்: நேசியுங்கள்.

உங்கள் அறிவை விரிவுபடுத்தவும், புதிய திறன்களைப் பெறவும் வாய்ப்புகளைத் தேடுங்கள். இது உங்களை எந்த சூழலுக்கும் பொருத்தமானவராகவும், உகந்தவராகவும் வைத்திருக்க உதவுகிறது. 

குறிப்பு: கற்றலை நிறுத்தும் எவரும் தேக்கமடைந்து வளர்வதை நிறுத்துவர்.

15. நிபுணத்துவத்தை உள்ளடக்குங்கள்.
  • ஒரு வலுவான பணி நெறிமுறையைக் கடைப்பிடிக்கவும். 
  • திறம்படத் தொடர்பு கொள்ளவும். 
  • சிறந்த முடிவுகளை வழங்கவும்.
16. உங்கள் பாதுகாப்பு மண்டலத்தை விட்டு வெளியே வாருங்கள்.

உங்கள் எல்லைகளைத் தாண்டி புதிய சவால்களை ஏற்றுக் கொள்ளும்போது தான் வளர்ச்சி ஏற்படும். உங்கள் பாதுகாப்பு மண்டலத்திலிருந்து வெளியே வராத வரை, உங்கள் வாழ்க்கையை, நீங்கள் ஒருபோதும் மேம்படுத்த முடியாது.

நினைவில் கொள்ளுங்கள்: உங்கள் பாதுகாப்பு மண்டலத்திற்கு வெளியே மாற்றம் தொடங்குகிறது.

17. அழகிய தருணங்களைத் தினசரி ஏட்டில் பதிவு செய்யுங்கள்.

பதிவுகள் மனதின் ரகசியங்களைத் திறந்து பார்க்க உதவுகிறது. சுய-மதிப்பிடு திறனை வளர்க்கிறது. தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நன்றி உணர்வை வெளிப்படுத்த உதவுகிறது. திறந்த மனநிலைக்கு வழிவகுக்கிறது. 

பதிவுகளைத் தொடர்ந்து எழுதிப் பயிற்சி செய்வது மிகச் சக்தி வாய்ந்தது.

18. சமூகத்திற்குத் திருப்பி தாருங்கள்.

தன்னார்வலர், வழிகாட்டி, உங்கள் இதயத்திற்கு நெருக்கமானவற்றை ஆதரித்தல்..,  ஏதோ ஒரு வகையில் நீங்கள் பெற்றதை இந்த சமூகத்திற்குத் திருப்பிக் கொடுங்கள்.

அன்புடன் செய்யும் சிறிய கருணை செயல்கள், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

19. முன்னேற்றத்தைக் கொண்டாடுங்கள்.

வளர்ச்சியைக் கொண்டாடுங்கள். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், முன்னோக்கிச் செல்லும் ஒவ்வொரு அடியும் உங்கள் அர்ப்பணிப்புக்கும் வளர்ச்சிக்கும் சான்றாகும். தொடர்ந்து பயணியுங்கள்.

20. தனித்துவத்தை உருவாக்குங்கள்.

உங்கள் நிபுணத்துவத்தை மட்டுமல்ல, உங்கள் மதிப்புகளையும் வெளிப்படுத்தும் விதமாகத் தனித்துவமான அடையாளத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் துறையில் உங்களைத் தனித்து நிற்கச் செய்கிறது.


Article taken with thanks from: 
Mr. Subramanian Narayan
OD Consultant, 
Culture Change and Business Results through Trust Building®, 
Professional Speaker, Executive Coach and Voiceover artist.



படங்கள்: இணையத்திலிருந்து நன்றியுடன்..

வியாழன், 29 செப்டம்பர், 2022

இந்த கண்கள் மட்டும் உன்னைக் காணும்.

இந்த பூமியே பூவனம்.




வாஷிங்டன் DC: L'Enfant Plaza Metro Station, 12th Friday, January'2007- Morning 7:51. 

L'Enfant Plaza மெட்ரோ நிலையம், ஃபெடரல் வாஷிங்டனின் மையப் பகுதியில் உள்ளது. அது ஒரு குளிர்ந்த காலைப் பொழுது. மெட்ரோ நிலையத்தின் சுரங்கப்பாதை வாயிலில் நின்றபடி, ஒருவர் வயலினை இசைத்தார். சுமார் 43 நிமிடங்கள் ஆறு 'Bach Pieces' இசைக் குறிப்புகளை வாசித்தார். 

ஏறக்குறைய 1,100 பேர் சுரங்கப் பாதை வழியாகக் கடந்து செல்கின்றனர். பெரும்பாலோர் அவசரமாக வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர். அநேகர் நடுத்தர அளவிலான நிர்வாகப் பதவியில் இருப்பவர்கள்.

மூன்று நிமிடங்கள் கடந்தது. ஒரு நடுத்தர வயது பயணி இசைப்பதைக் கவனித்தார். நடை வேகத்தைச் சற்று குறைத்து, நின்று சில நிமிடங்கள் கேட்டார். உடனே தமது வேலையைத் தொடரும்படி அவசரமாக அவ்விடம் விட்டு நகர்ந்தார். 

ஒரு நிமிடத்திற்குப் பிறகு, வயலின் கலைஞருக்கு முதல் டாலர் கிடைத்தது. ஒரு பெண்மணி பணத்தை எறிந்துவிட்டு நிற்காமல் தொடர்ந்து நடந்தாள்.

சில நிமிடங்கள் கடந்தது. யாரோ ஒருவர் அவரது இசையைச் சுவரில் சாய்ந்தபடி கேட்டார். சட்டெனத் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மீண்டும் வேகமாக நடக்கத் தொடங்கினார். அவர் நிச்சயமாக வேலைக்குத் தாமதமாகச் செல்வார்.

ஒரு 5 வயது சிறுவன் இசையைக் கேட்டவுடன் ஆசையுடன் நின்றான். அவனது தாய் அவசரமாக அவனைத் தள்ளிக் கொண்டு விரைந்து சென்றார். அந்தக் குழந்தையோ ஆர்வமாக வயலின் கலைஞரைத் திரும்பிப் பார்த்துக் கொண்டு நகர மறுத்தான். அந்த தாய் வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு நகர்ந்தார். ஆனாலும் அந்தக் குழந்தை தொடர்ந்து தலையைத் திருப்பிப் பார்த்த வண்ணம் சென்றான்.

ஆச்சரியமாக, பல குழந்தைகளும் இதே விதமாகவே நடந்து கொண்டனர். விதிவிலக்கு இல்லாமல் அனைத்துப் பெற்றோர்களும், குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி இழுத்துக் கொண்டு சென்றனர்.

இசைக் கலைஞர் இசைத்த அந்த 43 நிமிடத்தில், வெறும் 7 பேர் மட்டும் சிறிது நேரம் நின்றார்கள். 27 பேர் அவருக்குப் பணம் கொடுத்தனர், ஆனால் குழந்தைகள் தவிர அனைவரும் தொடர்ந்து தங்கள் வழக்கமான வேகத்தில் கடந்து சென்றனர். அவருக்கு $32 கிடைத்தது.

அவர் இசைத்து முடித்ததும் அந்த இடத்தில் மௌனம் ஆட்கொண்டது. யாரும் கவனிக்கவில்லை. யாரும் கைதட்டவில்லை. எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

அந்த நாளில் அங்கு வாசித்தவர், உலகின் தலைசிறந்த வயலின் இசைக் கலைஞர்களில் ஒருவரான ஜோசுவா பெல் (Joshua Bell). அவரை கடந்து சென்ற ஒருவரும் அதை அறியவில்லை. இதுவரை எழுதப்பட்ட இசைக் குறிப்புகளில் மிகவும் சிக்கலான ஒரு சிறந்த பகுதியை அன்று வாசித்தார். அதன் மதிப்பு பல மில்லியன் டாலர்கள் ஆகும்.

சுரங்கப்பாதையில் இசைப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு, பாஸ்டனில் உள்ள ஒரு அரங்கத்தில் ஜோசுவா பெல் அவர்களது இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இருக்கைக்கான நுழைவு சீட்டின்  சராசரி மதிப்பு $100.

இது சமூக பரிசோதனைக்காக நடத்தப்பட்ட ஒரு உண்மை நிகழ்ச்சி. 

மக்களின் அனுமானம் (Perception), விருப்பங்கள் (Desires/Taste) மற்றும் முன்னுரிமைகள் (Priorities) பற்றிய ஆய்வின் ஒரு பகுதியாக Washington Post பத்திரிக்கை மூலமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சோதனையின் அவதானிப்புகள் (observations) பல கேள்விகளை எழுப்பியது. 

ஒவ்வொரு நாளும் நாமும் இதே விதமாகப் பயணிக்கிறோம். 

இது போல், ஒரு பொது இடத்தில், பொருத்தமற்ற நேரத்தில், நல்லதொரு இசையை இரசிக்க முடிகிறதா? 

அப்படி இரசிக்க முடிந்தால், அதை நின்று கவனித்துப் பாராட்ட முடிகிறதா? 

எதிர்பாராத சூழலில் வெளிப்படும் திறமையை  அங்கீகரிக்கிறோமா?

தெருக் கலைஞர்கள், பார்வையற்ற பாடகர்கள்  நிகழ்ச்சியை நின்று கேட்பது உண்டா? அல்லது வெட்கம் மற்றும் எரிச்சல் ஆகியவற்றின் கலவையான உணர்வுகளுடன் அவசரமாக ஒதுங்கிச் செல்கிறோமா? 

இயற்கை அழகை இரசிக்க நேரம் இருக்கிறதா?  அல்லது எது தடுக்கிறது? 

இது போன்ற தருணத்தில் நாம் செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு என்ன? 

பெரும்பாலோர் இது போன்ற நிகழ்வுகள் நேரத்தை வீணடிப்பதாக எரிச்சலாகின்றனர்.

சிலர் நாகரீகமாக இருப்பதாகக் கருதி பணத்தை வீசுகிறார்கள்.

முக்கியமாகப் பணம் சம்பாதிப்பதற்காக ஓடுவதால் அழகுணர்வு, இரசனை இவற்றை நாம் நிறைய இழந்து விட்டோம்.

இந்த சோதனையின் முடிவுகளிலிருந்து எழும் சாத்தியமான கேள்வி: 

உலகின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவரது இசையை, இதுவரை எழுதப்பட்ட இசை குறிப்புகளில் மிகச் சிறந்த ஒரு நுட்பமான குறிப்பை, மிக அழகான இசைக்கருவிகளில் ஒன்றின் வழியாக இசைத்தாலும் நமக்கு நின்று பொறுமையுடன் அதை இரசிக்க ஒரு தருணம் இல்லையென்றால், 

விரைந்து செல்லும் வாழ்க்கையில் இன்னும் எத்தனை அழகிய விஷயங்களைப் பார்க்க, இரசிக்க, அனுபவிக்கத் தவற விட்டு இழந்து நிற்கிறோம்?

கவிஞர். வைரமுத்துவின் இந்த பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. 

நிலா காய்கிறது,
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே..,
இந்த கண்கள் மட்டும் உன்னைக் காணும்.

இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களைத் தேடுங்கள்

இதே கருத்தை வலியுறுத்தி, W.H. Daves அவர்களால் எழுதப்பட்ட சிறு கவிதை: "The Leisure அதன்  மையப் பொருள்:

What is this life if, full of care, 
We have no time to stand and stare.

உண்மையில் குழந்தைகள் இயற்கைக்கு மிக நெருக்கமானவர்கள். 

இயற்கை அழகை ரசிக்க, சிறந்த கலைகளை வியந்து பார்க்கக் குழந்தை மனம் வேண்டும்.

To read the full story with video:

https://www.washingtonpost.com/lifestyle/magazine/pearls-before-breakfast-can-one-of-the-nations-great-musicians-cut-through-the-fog-of-a-dc-rush-hour-lets-find-out/2014/09/23/8a6d46da-4331-11e4-b47c-f5889e061e5f_story.html

படம் இணையத்திலிருந்து நன்றியுடன்:

சனி, 24 செப்டம்பர், 2022

மனதில் உறுதி வேண்டும்.

மனம் வலிமை அடைய உதவும் 

8 - பழக்கங்கள்

(Eight habits that help become mentally strong.) 



புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக வேலை செய்யும் சூழல் அடிக்கடி மாற்றம் பெறுகிறதுபல சமயங்களில் கஷ்டப்பட்டு உழைத்தாலும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடிவதில்லை. உடன் பணிபுரிபவர்களுடன் உறவுகளைப் பேணுவதும் கடினமாக இருக்கிறது.

அத்துடன் அன்றாடக் குடும்பத் தேவைகள் பாரமாக அழுத்துகிறது. அனுதினம் பல எதிர்பாராத நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. வாழ்க்கை எளிமையாக இல்லை. அது ஒரு சவாலாக இருக்கிறது. பலருக்கும் இந்த சவாலைச் சந்திக்கத் தயக்கம். போட்டியை எதிர் கொள்ளப் பயம். தோல்வியைக் கையாள இயலாத நிலைஇது விரக்தியை ஏற்படுத்துகிறது.

இந்தச் சூழலை எதிர் கொள்ள மன வலிமை தேவை. வெற்றி பெறுவதற்கு நம் மீதும், நமது திறன்களின் மீதும் நம்பிக்கை வைத்து, இழந்த மன உறுதியை மீட்டெடுப்பது மிகவும் முக்கியம். பிறக்கும் போதே தைரியம், தன்னம்பிக்கை ஒட்டிக் கொண்டு யாரும் பிறப்பதில்லை. அதற்காக அர்ப்பணிப்புடன் நேரம் ஒதுக்கி முயற்சி செய்தால் இந்தப் பண்புகளை வளர்த்துக் கொள்ள முடியும்

இந்த கட்டுரை மனம் வலிமை பெற உதவும் 8  பண்புகளைக் குறிப்பிடுகிறது. 

குறிப்பாக நீங்கள் பணியிடத்தில் மனரீதியாக வலுவாகவும், சுயச்சார்பு உடையவராக்கவும் வளர இந்த பண்புகள் உதவலாம்.

1. சுய கட்டுப்பாடு அவசியம் -(Engage in self-discipline): 

வெற்றிகரமாகச் செயல் புரிவதற்கு ஓர் ஒழுங்கு முறையில் செயல் புரிவது அவசியம் (Organized). வெற்றிகரமான நபர்கள் தங்கள் வேலையைச் சரியாகப் புரிந்து கொள்வார்கள். அந்தப் பணியை முழுமையாக முடிக்கும் வரை அவர்கள் கவனம் சிதறாது (Concentration). எதையும் அலட்சியமாக அல்லது அரை குறையாகச் செய்ய மாட்டார்கள்.

அடுத்ததாக, பணியில் ஏற்படும் தோல்விக்கு மற்றவர்களைக் குறை கூறி தப்பிக்கக் கூடாது. பிறர் மீது எளிதாகப் புகார் கூறி சில காலம் ஓட்ட முடியும். ஆனால் அது நீண்ட காலத்திற்கு உதவாதுவாழ்க்கையில் முன்னேற விரும்பினால் செயலுக்கான விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் (Responsibility).

செய்ய வேண்டிய பணிகளில்எது முதலில் செய்ய வேண்டியது, பின்னர் எவை என வரிசைப் படுத்திப் பணி புரிவது அவசியம் (Priority).

செய்ய வேண்டிய பணியின் செயல் வழி முறைகளை முன் தயாரிப்பு செய்வது அவசியம் (Preparations). ஒழுங்கு முறையுடன் பணி புரிவதைக் கவனமாகத் தொடர்ந்து பின் பற்ற வேண்டும். அது இயல்பான  பழக்கமாக மாற வேண்டும்இதனால் செய்யும் வேலையில் எதிர்பாராத தவறுகள் நிகழாது.

இவை பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்க உதவும். ஒழுங்கு முறையுடன் பணி செய்யும் பண்பை நேரம் ஒதுக்கித் தொடர் முயற்சி செய்தால் வளர்த்துக் கொள்ள முடியும். 

2. பாதுகாப்பு  வளையிலிருந்து வெளியேறவும் - (Step out of your comfort zone): 

கப்பல் துறைமுகத்தில் நிற்பது பாதுகாப்பானது தான்ஆனால் அது  அதற்காகக் கட்டப்படவில்லை

நமக்குப் பாதுகாப்பானதாக உள்ள குழுவுடன் இருப்பதால் வசதியாக உணரலாம். ஆனால் அங்குதான் நமது திறன் மற்றும் வளர்ச்சிக்குத்  தடையைப் போடுகிறோம்.

இதன் விளைவாக நமக்குப் பழக்கமில்லாத  சூழ்நிலை அல்லது  ஒரு பணி கொடுக்கப் படும் போது அப்படிப்பட்ட திடீர் நிகழ்வை எதிர் கொள்ள முடியாமல் தவிக்க நேரிடுகிறது. மனதில் ஒரு பாரம் ஏற்படுகிறது. அதைக் கையாள முடியாமல் தோல்வி அடைய நேரிடுகிறது.

இதற்குத் தீர்வு, நம்மைப் பயமுறுத்தும் சிறிய விஷயங்களைச் செய்வது. அங்கிருந்து தொடங்கி மனதில் நம்பிக்கையை உருவாக்குவது.  

தனியாகப் பயணம் செய்யப் பயப்படுகிறீர்கள் என்றால் முதலில் சிறிய தொலைவு பயணம் மேற்கொள்ளவும். சக ஊழியர்களுடன் வெளிப்புறப் பணிகளுக்குச் செல்லுங்கள். அலுவலக பணி முறைகளை முயற்சி செய்து கற்றுக் கொள்ளுங்கள்

முக்கிய விஷயம் என்னவென்றால், அச்சங்களை மேற்கொள்வது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் எல்லாவற்றையும் செய்யத் துணிவு பெறுவீர்கள்.

3. தவறுகளை உணர்வது தவிர்க்கக் கற்பது - (Realize your mistakes and find ways to improve) 

வெற்றிகரமாக வளர உதவும் மற்றொரு பழக்கம்  தவறுகளைப் பகுப்பாய்வு செய்வதாகும்சில நேரங்களில் தவறு நிகழ்வது தவிர்க்க முடியாதுஆனால் அவற்றுக்கான நமது  எதிர்வினை தான் மிக முக்கியம். 

தவறுகளின் பின் விளைவுகளைக் கண்டு பயந்து ஓடி ஒளிவது அல்லது அதை மறைப்பது பலவீனத்தையே தரும். எந்த இடத்தில் தவறு செய்கிறோம் எனப் புரிந்து கொள்ளவில்லை என்றால் மீண்டும் அதே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்ய நேரிடும். இறுதியில் தன்னம்பிக்கையை இழப்போம்எனவே தவறு நிகழ்ந்த ஒவ்வொரு சூழ்நிலையையும் கவனமாக உங்கள் பார்வையிலிருந்து ஆராய்ந்து பாருங்கள்.

எதனால் தவறு நிகழ்கிறது, அது எங்கிருந்து தொடங்குகிறது என்பதைக் கண்டறிய முயலவும். அதனால் அடுத்த முறை அதே போன்றதொரு சூழ்நிலையை எதிர் கொள்ளும் போது எப்படி செயல் புரிய வேண்டும் என அதிக நிச்சயமாகத் தெரியும். இது புத்தியுடன்  நடந்து கொள்ள உதவுகிறது.

4. ‘இல்லைஎன்று சொல்லிப் பழகுங்கள் - (Practice saying ‘NO’):

'இல்லை' என்று சொல்வது' எளிதானது போலத் தோன்றினாலும் சில சூழ்நிலைகளில் அது மிகக் கடினமானதுகுறிப்பாக உங்கள் மேலதிகாரியின் கருத்தை மறுப்பது எளிதானதல்ல. நீங்கள் புதிதாக பணியில் சேர்ந்தவர் அல்லது இளகிய மனம் படைத்தவராக இருந்தால் இல்லை என்று சொல்லத் தயங்குவீர். 

நீங்கள் எந்த வேலை செய்யச் சொன்னாலும் மறுக்கமாட்டீர்கள் எனும் உங்கள் இயலாமை விரைவில் எல்லோருக்கும் தெரிய வரும். இதன் விளைவாக, நீங்கள் செய்யத் தேவை இல்லாத பணிகள் உங்கள் மீது விழும். இது தேவையற்ற கடினமான சூழலில் உங்களைச் சிக்கித் தவிக்க வைக்கிறது. 

அதனால் மற்றவர்கள் உங்கள் நேரத்தையும், முயற்சியையும், ஆற்றலையும் பயன்படுத்தி அவர்களது தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதைக் காணலாம்.

ஒவ்வொரு முறையும் 'ஆம்' என்று சொல்வது மிகவும் ஆரோக்கியமற்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்உங்களால் முடியாதவற்றை ‘முடியாது’என்று சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. நச்சு உறவுகளிலிருந்து விலகி ஓடுங்கள் - (Distant yourself from toxic relationships):

உறவுகளில் மிக மிகக் கடினமானது சுய நல விரும்பிகளுடன் பழகுவது. அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எவரையும் பலி கொடுக்க தயங்க மாட்டார்கள். அவர்களுக்கு நன்கு நடிக்கத் தெரியும். அவர்கள் விரும்பும் சூழலைச் சுலபமாக உருவாக்கி விடுவார்கள்மிகச் சுலபமாக  மற்றவர்கள் மீது பழி சுமத்தி விடுவார்கள். இவர்கள் நச்சுத் தன்மை உடையவர்கள். இவர்களுடன் பழகுவது பாம்புடன் பழகுவதற்குச் சமம்.

நச்சுத்தன்மையுள்ளவர்களால் உங்கள் ஆற்றலை அழித்து விட முடியும்நீங்கள் அறியாத வகையில் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை  நுட்பமாக அறிந்து கொள்வார்கள். பின்னர் அவர்கள் நினைப்பதை உணர்ச்சிகரமான வகையில் ஏமாற்றி அல்லது பயமுறுத்திச் சாதித்துக் கொள்வார்கள்

அதை நீங்கள் உணரும் போது மனம் உடைந்து விடும். அதைக் கண்டு உணராமல் இருந்தது உங்கள் தவறு. அதற்காக அவர்களைக் குறை கூற முடியாது. விழிப்புடன் இருப்பது நமது பொறுப்பு.

அதைப் போல நம்முடன் நீண்ட கால தொடர்பில் உள்ள சில நபர்கள் காலப் போக்கில் நமது "தவிர்க்க முடியாத பலவீனமாக" மாறி, நம்மைப் பயன்படுத்திக் கொள்ள விரைவாகக் கற்றுக் கொள்கிறார்கள்

இத்தகைய நச்சு உறவுகள் ஏற்படுத்தும் பாதிப்பு கடுமையான மன அழுத்தத்தை உருவாக்கி விடும். பின்னர் அது நீண்ட கால துயரமாக ஆகி உங்கள் மனதில் ஆறா காயமாக மாறிவிடும். 

எனவே, உங்கள் மன அமைதிக்காக நட்பு/உறவுகளை மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்வது மிகவும் முக்கியம்நீங்கள் அதைப் புறக்கணித்தால், காலப்போக்கில் சரி செய்ய முடியாத அளவு சேதம் ஏற்பட்டு விடும். 

உங்கள் நட்பு/ உறவு வட்டத்தைச் சுத்தம் செய்வதன் மூலம், உங்கள் ஆற்றலை மேம்படுத்த முடியும்உறவுகளை வைக்க வேண்டிய தூரத்தில் வைத்தால்நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை நீங்கள் விரும்பும் வகையில் செய்திட போதுமான சுதந்திரம் உங்களுக்குக் கிடைக்கும்

6. உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்ளவும். (Learn your strengths and weakness and try to play around with it.

புத்திசாலித்தனமான மனதை உடையவர்கள் வாழ்க்கை அவர்களை நோக்கி வீசும் எந்த சவால்களையும் சந்திக்க நன்கு தயாராக உள்ளனர்

ஏனெனில் அவர்களுக்கு தங்கள் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன என்பது நன்கு தெரியும். அவற்றை தங்கள் நன்மைக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.

"என்னை யாராலும் வெல்ல முடியாது" என்று நினைப்பது முட்டாள்தனம். அத்தகைய மனநிலை உங்களை ஒரு பெரும் வீழ்ச்சிக்கு (மனதளவில்) தயார்ப் படுத்துகிறது. வீழ்ந்த பின்னர் மனதை உடைவிலிருந்து மீட்டெடுப்பது எளிதானதல்ல.

உங்கள் பலவீனங்கள் எவை என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். திரும்பத் திரும்பச் செய்யும் தவறுகள் அனைத்தும் ஆழ் மனதில் இன்பமாக  / இயலாமையாக உணர்வதால் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறதுஉங்கள் தோல்விகளைப் பகுப்பாய்வு செய்து குறை (weakness) எது என உணர்ந்தால் மட்டும் போதாதுஅதை ஏற்றுக் கொண்டு, சரி செய்யக் கற்றுக்கொண்டால் மட்டுமே சாதிக்க முடியும்.  

7. உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள் - (Keep your emotions in check):

உணர்ச்சிவசப்படுவது இயல்பானது. கட்டுப்பாடு  மிக்கவராக இருப்பதற்காக, உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் மறைக்க வேண்டாம். உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள்சில சமயங்களில், அடக்கப்பட்ட உணர்வை வெளியிடுவது மனதிற்கு நிவாரணம் தருகிறது

மனதின் காயங்களுக்கு ஆறுதல் அளிக்கவும் உதவுகிறது. மேலும் மனம் வலிமை அடைகிறதுஉள்ளத்தின் உணர்ச்சிகளை வரம்பு மீறி அடக்கும் போது முடிவு செய்யும் திறன் பாதிக்கப்படுகிறது. எதிர்வினை உணர்ச்சியற்றதாக இருக்கக்கூடாது, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் உங்களுக்கு எதிரிடையான செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். 

உண்மையில், மனரீதியாக வலிமையானவர்கள் மீண்டும் மீண்டும் எப்படி கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு மற்றவர்களை விட அதிக உணர்ச்சி வசப்படுவார்கள்

8. பெரிய சவால்களைப் பகுதிகளாகப் பிரிக்கவும் - (Break down challenges into parts) 

எப்பொழுதும் பெரிய திட்டப் பணிகள் மலைப்பாக இருக்கும். அதை முழுவதுமாகப் பார்ப்பது பயமுறுத்தலாம்

பெரும் பணிகளை முதலில் சிறு சிறு வேலையாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு சிறிய வேலைக்கும் நேரத்தை நிர்ணயிக்க வேண்டும்

அடைய வேண்டிய இலக்கை அடைவதற்குத் தேவைப்படும் கால அட்டவணைகள் உருவாக்க வேண்டும்ஒரு நேரத்தில் ஒரு பகுதியில் மட்டுமே கவனம் செலுத்தினால், நீங்கள் நீண்ட தூரம் செல்லலாம்

சிறிய வேலைக்கு ஒதுக்கப் பட்ட கால அளவில் அதை முடிப்பது எனும் திட்ட அளவில் மட்டும் கவனமாகச் செயல் புரியு வேண்டும்தீவிர முயற்சிகள், கடின உழைப்பு, நேர நிர்வாகம் செய்தால் படிப்படியாகச் சென்று இறுதி இலக்கை  அடைய முடியும்.  


Written based on the article influence with thanks: 8 habits that help become mentally strong written by Rachna : https://www.pixstory.com/story/habits-that-help-become-mentally-strong/139621

படம் இணையத்திலிருந்து நன்றியுடன் .