சனி, 29 செப்டம்பர், 2018

நற்குணங்கள் தரும் நல்வாழ்வு.

🌺 நற்குணங்கள் தரும் நல்வாழ்வு.




🔹 கசப்பை வளரவிடாதீர்கள். பழிவாங்குதலில் முடியும்வரை அதன் அனல் அணையாது!

அதற்கு மாற்றாக அன்பினால் மனதை நிரப்புங்கள். அதன் நேசத்தில் எப்போதும் மகிழ்ந்து களி கூறலாம்.

🔸 இச்சையை வளரவிடாதீர்கள். விபச்சாரத்தில் முடியும்வரை அதன் இமை சாயாது!.

ஒழுக்கத்தை உயிரை விட மேலாக கருதி நேசியுங்கள். அதுவே வாழ்வை மேன்மைப்படுத்தும்.

🔹 கோபத்தை வளர விடாதேயுங்கள். கொலையில் முடியும்வரை அதன் குருதி ஆறாது!

மன்னிப்பை ஈந்தளியுங்கள். மனதின் சமாதானம் கடலைப்போல விஸ்தாரம் ஆகும்.

🔸 பெருமையை வளர விடாதேயுங்கள். அவமானத்தில் முடியும்வரை அதன் தாகம் தீராது!

தாழ்மையை மனதில் எப்போதும் தரித்துக் கொள்ளுங்கள். அது உயர்ந்ததும் உன்னதமான நிலையை எய்திட அனுக்கிரகம் செய்திடும்.

🔹 பொறாமையை வளர விடாதேயுங்கள். நம்மை கொல்லாதவரை அதன் வேகம் குறையாது!

பிறரின் திறமையை, உழைப்பை, உயர்வை அங்கீகரியுங்கள். அது அனைவருடனும் நட்போடும், நேசத்துடனும் வாழ்வில் சுபிட்சமாக வாழந்திட அருள் செய்யும்.

வாழ்க வளமுடன்.

2 கருத்துகள்:

  1. வளர விடக் கூடாத குணங்களையும் அவற்றால் வரக் கூடிய விளைவுகளையும் சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு