திங்கள், 8 அக்டோபர், 2018

மகிழ்ச்சிக்கான நான்கு வழிப் பாதை.

மகிழ்ச்சி - ஒரு நெடிய நான்கு வழிப் பாதைப் பயணம்.


(Khasab Musandam)

மனிதர்களின் மனதில் மகிழ்ச்சி பொங்கும் போது மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் குறித்த ஆய்வு குறிப்புகள் மிகவும் சுவாரசியமானது.

அதன் படி மகிழ்ச்சிகரமான சூழலில் நான்கு விதமான வேதிப் பொருட்களை மூளையில் இருந்து வெளிப்படுகிறது என கண்டுபிடிக்கப்பட்டது.

அவை:
  • Endorphins
  •  Dopamine
  •  Serotonin
  •  Oxytocin
எத்தகைய சூழலில் இருந்து இந்த வேதிப்பொருட்கள் மூளையில் இருந்து வெளிப்படுகிறது என பார்ப்போம்.

1. உடற்பயிற்சி:

 

(Gym at Khasab Musandam)

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மிக முக்கியமானது. இதன் தொடர்ச்சியாக முறையாக உடற்பயிற்சி செய்வது முக்கியம். இவ்வித உடற்பயிற்சிகள் செய்வதால் தசைகள் களைப்படைகின்றது. இந்தத் தசைகளை வலுப்படுத்தவும் உடல் வலியைப் போக்கவும் மூளையில் இருந்து சுரக்கும் வேதிப் பொருள் தான் Endorphins.

இது மனதில் மகிழ்ச்சி மற்றும் பெருமித உணர்வுகளை வெளிப்படுத்தும். எனினும் இது ஏற்படுத்தும் மகிழ்ச்சி உணர்வு தற்காலிகமானது.

2. இலக்கை அடைதல்:


(Coastal Project Road Khasab Musandam)

வாழ்க்கை என்பது சிறிய மற்றும் பெரிய இலக்குகளால் வழி நடத்தப் பெறுகின்றன. குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி, இலகுவான பயணத்துக்கு உகந்த வாகனங்கள், வசதியான வீடு, விடுமுறைக்குச் சுற்றுலா, உயர்ந்த ஆடைகள், வேலையை எளிதாக்கும் சாதனங்கள்..., என அடைய ஆசைப்படும் பட்டியல் மிக நீளமானது. இத்தகைய இலக்கை அடையவே கடுமையாக திட்டமிட்டு உழைக்கிறோம்.

இந்த இலக்கை அடையும் தருணங்களில் நமது மூளையில் இருந்து வெளிவரும் வேதிப் பொருள் தான் Dopamine. இந்த இரசாயனப் பொருள் மனதில் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் திருப்திகரமான உணர்வை ஏற்படுத்தும். ஒவ்வொரு இலக்கை அடையும் போது இந்த மகிழ்ச்சியான உணர்வைப் பெற முடியும். இதுவும் ஒரு தற்காலிக உணர்வுக் தூண்டுதலே.


3. சமூக நலம் விழைதல்:



(Sunday School Children -  St. Luke Church, Salalah)

நமது பணம், திறமை, நேரம் இவற்றை நம்மைச் சுற்றி வாழும் சமூக மேம்பாட்டுக்காகச் செலவிடும் போது மூளையில் இருந்து வெளிவரும் வேதிப் பொருள் தான் Serotonin.

அதனால் தான் வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர்கள் இந்த சமூகத்திற்கு என தங்கள் பணத்தை, நேரத்தை, திறமையை அளிக்க உந்தப் படுகின்றனர். நம்மைச் சுற்றி வாழும் மக்களுக்கு உதவும் போது ஆத்ம திருப்தி உண்டாகும்.

ஓய்வு நேரத்தில், விடுமுறை காலத்தில் தொண்டு நிறுவனங்கள், சமூக பணி செய்யும் மையங்கள் இவர்களோடு சேர்ந்து பணிபுரிவது நல்ல நட்புககளின் அறிமுகமும் கிடைக்கும். இத்தகைய பணி புரிதல் வாழ்க்கையை அர்த்தம் நிறைந்ததாக மாற்றும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்குச் சமூகத்திற்கு நமது பங்களிப்பை நல்குவோம்.

4. அன்பும் அக்கறையும்:


(With Grand daughter Merryl)

Oxytocin எனும் வேதிப்பொருள் நமது உள்ளத்தில் அன்பு உணர்வு பொங்கும் தருணங்களில் உருவாகிறது. நண்பர்களோடு சேர்ந்து அளாவுதல், உறவுகளின் நெருக்கமான பகிர்தல், பிடித்தமான மனிதர்களின் கூட்டுறவு, நீண்ட பிரிவுக்குப் பின்பு சந்திக்கும்போது கட்டிக் தழுவுதல் என நெருக்கமான அன்பின் தருணங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அவசியம்.

உறவுகளை மேம்படுத்துவது வழியாக மகிழ்ச்சியாக இருக்க முடியும். நான்கு வழிப் பாதையில் இதுவே மிக எளிய வழி. புன்னகை பொங்கும் முகத்துடன் சந்தியுங்கள். அனைவருடனும் அன்பு செலுத்துங்கள். உடன் வாழ்பவர்களுடன் இணக்கமாக இருப்பதற்கு முயற்சி எடுங்கள். நண்பர்களோடு விளையாட்டுகள், உறவுகளோடு விழாக்கள் என  உற்சாகம் தரும் நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

இந்த நான்கு வாழ்க்கை முறைகளும் கடைப்பிடிப்பதன் வழியாக முழுமையான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்..

வாழ்க வளமுடன்.


12 கருத்துகள்:

  1. அருமை.. நல்ல பயனுள்ள பதிப்பு.. அறிவியலோடு விவரிப்பது சிறப்பு.. நான்காவது பாதை அழகு..

    பதிலளிநீக்கு
  2. மனதில் மகிழ்ச்சி ஏற்படும் போது நிகழும் வேதியியல் மாற்றங்கள் குறித்த பகிர்வு அருமை. மகிழ்ச்சியை அடைய நான்கு வழிப் பாதையில் பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. "வாழ்வது நல்ல அறிவியல் பார்வையில் உள்ளது" என அழகு தமிழில் சொல்லி இருப்பது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அருமையான பதிவு. அறிவியல் பார்வையில்

    பதிலளிநீக்கு
  5. அருமையான விளக்கம்.....!
    வாழ்த்துகள்....
    *****
    ராஜன்.சே

    பதிலளிநீக்கு