செவ்வாய், 5 நவம்பர், 2019

உன்னதத்தை நோக்கி..,

புனிதர் பிரான்சிஸ் அசிசியின் இறை வேண்டல்.


(Source : El Greco paintings - 1580)




இறைவா, 
என்னை உமது அமைதியின் கருவியாக்கும்;

எங்கே வெறுப்பு நிறைந்துள்ளதோ, 
அங்கு அன்பையும்

எங்கே மனவருத்தம் நிறைந்துள்ளதோ, 
அங்கு மன்னிப்பையும்

எங்கே சந்தேகம் நிறைந்துள்ளதோ, 
அங்கு விசுவாசத்தையும்

எங்கே அவநம்பிக்கை நிறைந்துள்ளதோ, 
அங்கு நம்பிக்கையையும்

எங்கே இருள் சூழ்ந்துள்ளதோ, 
அங்கு ஒளியையும்

எங்கே துயர் நிறைந்துள்ளதோ, 
அங்கு அகமகிழ்வையும்
விதைத்திட அருள்புரியும்.

என் இறைவா,

ஆறுதல் பெறுவதைவிட 
ஆறுதல் அளிக்கவும்

புரிந்து கொள்ளவேண்டும்
என்பதைவிடப் 
பிறரைப் புரிந்து கொள்ளவும்

அன்பு செய்யப்படுவதைவிடப் 
பிறரை அன்பு செய்யவும்

வரமருள்வாய். ஏனெனில்,

கொடுப்பதில் மூலம்தான்
பெற்றுக் கொள்ள முடியும்

மன்னிப்பதன் வழியாகத்தான்
மன்னிப்பு அடைய முடியும்

சுயத்துக்கு இறப்பதில் தான்
முடிவில்லா வாழ்வை அடைய முடியும்.

இறைவா! அப்படியே ஆவதாக.

*******   *******   *******   *******   *******

Prayer of Saint Francis of Assisi


Lord, 
make me an instrument of your peace

Where there is hatred, 
let me sow love

Where there is injury, 
pardon

Where there is doubt, 
faith

Where there is despair, 
hope

Where there is darkness, 
light

And where there is sadness, 
joy

O Divine Master, grant that I may

Not so much seek to be consoled as to console

To be understood, as to understand

To be loved, as to love

For it is in giving that we receive

And it's in pardoning that we are pardoned

And it's in dying that we are born to Eternal Life

Amen

*******   *******   *******   *******   *******

புனிதர் பிரான்ஸிஸ் அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம் :


புனித பிரான்ஸிஸ் கி.பி. 1181 ம் ஆண்டு இத்தாலியில் உள்ள அசிசி என்னுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பியேட்ரோ டி பெர்னார்டோனே (Pietro di Bernardone). அவர்  செல்வந்தரான ஒரு துணி வணிகர் ஆவார். இவரது தாயார் பிக்கா பூர்லமோ (Pica Bourlemont). பிரான்ஸிஸ் தமது இளவயதுவரை செல்வச் செழிப்புமிக்க வளமான வாழ்வு வாழ்ந்தார். 

அசிசி நகருக்கும், அருகாமை நகரான பெரூஜியா (Perugia) நகருக்கும் இடையில் நீண்ட பகையும், இடைவிடா போரும் இருந்து வந்தது. கி.பி.1201ம்  ஆண்டில் இரு நகருக்கும்  இடையில் போர் நிகழ்ந்தது. அப்போது இருபது வயதே நிறைந்த பிரான்சிஸும் படையில் சேர்ந்தார். போரில் எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார். 

சிறையிலிருந்தபோது பல துன்பங்களுக்கு ஆளானார். சிறையிலிருந்து வீடு திரும்பியபின் இவர் தம் வாழ்வுப் பாதை மெல்ல மெல்ல மாறியது. தனிமையை நாடினார். கேளிக்கைகளை வெறுத்தார். ஏழையிலும் பரம ஏழையாக விரும்பினார். இவருக்குப் புத்தி சுவாதீனம் ஏற்பட்டுவிட்டதெனத் தந்தை வீட்டில் சிறை வைத்தார்.

வீட்டைத் துறந்து மிக வறியவராக அலைந்து திரிந்தார். கி.பி. 1206 ம் ஆண்டு  அசிசி நகர்ப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த புனித தமியானோ ஆலயத்தில் இறை வேண்டல் செய்யச் சென்றார். அக்கோவில் பெரிதும் பழுதுபட்டு, பாழடைந்த நிலையிலிருந்தது. கோவிலின் உள்ளே நுழைந்த பிரான்சிசு இயேசுவின் திருச்சிலுவை முன் மண்டியிட்டு உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். 

அப்போது இயேசுவின் குரல் தெளிவாகப் பிரான்சிசின் காதுகளிலும் உள்ளத்திலும் ஒலித்தது: "பிரான்சிசு, என் வீடு பாழடைந்து கிடப்பதைப் பார்க்கிறாய் அல்லவா, எழுந்து சென்று அதைச் செப்பனிடு! 
இயேசுவே தம்மிடம் பேசுகிறார் என்பதை உணர்ந்ததும் பிரான்சிசு, "அப்படியே செய்கிறேன், ஆண்டவரே" என்று உற்சாகத்தோடு தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். முதலில் பழுதுபட்ட ஆலயத்தைச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டார். பின்பு இயேசுவின் உபதேசங்களை மக்களுக்கு அறிவிப்பதே தனது பணியென உணர்ந்தார். 

இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தின்படி எளிமையிலும் எளியவராக. வாழ்ந்தார். அவரைப் பின்பற்றிய ஆண்கள், பெண்களுக்கு எனத் துறவர 
சபைகளை நிறுவினார். 
கி.பி. 1226ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி இறையரசில் இனைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக