சனி, 27 ஜூலை, 2019

திருவாசகம் ஒரு எளிய அறிமுகம் - 1.

திருவாசகம் ஒரு எளிய அறிமுகம் - 1.


திருவாசகம் சைவ சமய வழி வாழும் மக்களால் ஒரு தெய்வ நூல் என்று போற்றப்படுகின்றது. இந்த தெய்வநூலை பூஜை அறையில் வைத்து வழிபடுவது மரபு.

இந்நூலை இயற்றியவர் மாணிக்க வாசகர். மாணிக்க வாசகருக்கு இறைவன் காட்சியளித்து தீட்சை வழங்கி மறைந்தார். மறைந்த இறைவனை மீண்டும் தரிசிக்க இறைஞ்சி மனமுருகிப் பாடியது திருவாசகம்.

மாணிக்க வாசகர் இயற்றிய நூல்கள் இரண்டு.

1. திருமுறை.
2. திருக்கோவையார்.

இந்துக்களின் வேத நூல்கள் நான்கும் வட மொழியில் இயற்றப்பட்டவை.

இதற்கு இணையாகத் தமிழில் உள்ள நூல்கள்

1. திருமுறை
2. நாலாயிரத் திவ்விய பிரபந்தம்.

திருமுறை தமிழர்களின்  வேதாகமம் எனப் போற்றப்படுகின்றது. திருமுறை ஏக இறைவனைப் போற்றிப்  புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்கள் ஆகும்.

இதில் சிவ ஆகமங்கள், தத்துவ தரிசனங்கள், சித்தாந்தங்கள் ஆகியவற்றை விளக்கும் நூல்களின் தொகுப்பு ஆகும்.

திருமுறைகள் மொத்தம் பன்னிரெண்டு ஆகும்.

முதல் ஏழு திருமுறைகள் தேவாரப் பாடல்களாக விளங்குகின்றன.

எட்டாம் திருமுறையில்தான் திருவாசகமும், திருக்கோவையும் உள்ளன.

2 கருத்துகள்: