வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

உபநிஷத்துக்கள் - அறிமுகம்

 🌺 உபநிஷத்துக்கள் - அறிமுகம்



ஒரு நூலை வாசிக்கும் போது அதன் பொருளை சிறிதளவே மனம் உள் வாங்குகிறது.

கற்றுக்கொண்டதை மனதில் நிறுத்திப் பின் எழுதிப் பார்க்கும் போது பல வார்த்தைகளின் உள் அர்த்தத்தை மனம் புரிந்து கொள்கிறது.

கற்றதை மற்றவர்களுக்கு சொல்லித் தருவது, மற்றவர்களுடன் விவாதிப்பது அந்த நூலின் கருத்துக்களை பல கோணங்களில் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.

அதன் அடிப்படையில் எனது கற்றலை மேம்படுத்தவும், எனது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடவும் உபநிஷத்துக்களை வாசிக்கத் துணிந்தேன்.

மற்ற நூல்களைப் போல இந்த வாசிப்பு எளிதல்ல என்பது  நான் எதிர்பார்த்ததுதான்.

ஒரு நாளில் 3 அல்லது 4 பக்கங்கள் வாசிப்பதும் அதைப் புரிந்து கொள்வதுமே சாத்தியமாக உள்ளது.

முறையாகத் தொடர்ந்து உபநிஷத்தை வாசிக்கவும், கற்றுக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வரும் காலத்தில் எனது சேமிப்பாகவும் இருக்கும் என இந்தப் பகிர்வுகளை பதிவிடுகிறேன்..


உபநிஷத் என்றால் என்ன?


குருவைத் தஞ்சமாக அடைந்து பெறப்பட்ட நிலைத்த ஞானத்தினால் எவர் ஒருவர் துயரத்தில் இருந்து விடுபடுகிறாரோ, அந்த ஞானம் உபநிஷத்.

அப்படிப்பட்ட ஞானத்தைக் கொடுக்கும் நூல் உபநிஷத்துக்கள்.

உப : குருவின் அருகில் செல்லுதல்.

நி : மெய்ப்பொருளைப் பற்றிய ஞானத்தை அடைதல்.

ஷத் : துயரத்தை நீக்குதல்.

உபநிஷத்தின் நோக்கம் :


உலகப் பொருட்கள் தரும் இன்பம் முழு நிறைவைக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு இன்பத்துடன் துன்பம் கலந்தே உள்ளது. உலக இன்பங்கள் நம்மை அடிமையாக்குகின்றன. மெய் வழியைப்,  போதனையை உரையாடல் வழியாக உணர்த்தி வாழ்வின் உண்மையான பொருளையும் முழு மனநிறைவை அடையும் வழியை போதிப்பதே வேதத்தின் சாரம்.

உபநிஷத்தின் போதனைமுறை : உரையாடல்


உபநிஷத் பொதுவாக குரு - சிஷ்யனின் உரையாடலாக அமைந்திருக்கும். ஒன்று அல்லது பல உரையாடல்கள் சேர்ந்தது உபநிஷத் ஆகும்.

ஒவ்வொரு வேதத்தின் கடைசியிலும் பல உபநிஷத்துக்கள் உள்ளன.

ஏழு உபநிஷத்துக்கள் :


1. முண்ட கோபநிஷத் (அதர்வண வேதம்)

2. கேனோபநிஷத் (சாம வேதம்)

3. கடோபநிஷத் (யஜுர் வேதம்)

4. கைவல்யோபநிஷத் (அதர்வண வேதம்)

5. தைத்திரீயோபநிஷத் (யஜுர் வேதம்)

6. ஈசாவாஸ்யோபநிஷத் (சுக்ல யஜுர் வேதம்)

7. மாண்டூக்யோபநிஷத் (அதர்வண வேதம்)

முதலில் இந்த ஏழு நூல்களைத் தொடர்ந்து வாசிக்கவும்,  கற்றுக்கொள்ளவும், எளிமையான மொழி நடையில் பகிரவும் விரும்புகிறேன். வேதத்தை கற்பது பயனுள்ள வாழ்வு வாழ உதவும் என நம்புகிறேன்.

கடவுள் அருள் புரியட்டும். 

6 கருத்துகள்:

  1. உங்கள் செயல் இந்த சமுதாயம் பயன் பெற வேண்டி எண்பதால் இறைவன் அருள் புரியட்டும்... நன்றி

    பதிலளிநீக்கு
  2. அன்னை தமிழில் ஆன்மீக தேடல் படித்தேன்,மகிழ்ச்சி, அமிழ்தம்.

    பதிலளிநீக்கு