செவ்வாய், 30 ஜூலை, 2019

திருவாசகம் - வாழ்க்கைப் பயனீடு

திருவாசகம் - வாழ்க்கைப் பயனீடு


மனிதனின் இயல்புத்தன்மை சிற்றியல்புகளில் மிகுதியான விருப்பத்துடன் ஈடுபடுதல் ஆகும்.

இந்த சிற்றின்ப மோகம் படைக்கப்பட்ட நோக்கத்தை மறைத்து, அதனின் மனிதரை விலக்கி, இலக்கை உணர்ந்து கொள்ளாதவாறு வழுவி விலகச் செய்கின்றன.

இந்த சிற்றின்ப நாட்டத்தை மனதிலிருந்து நீக்கும்  முறைகளைத் திருவாசகம் விவரிக்கின்றது.

மனதை ஒரே இறைவனை நோக்கி வழி நடத்துகின்றது.

மனிதரின் வாழ்க்கை நோக்கத்தைத்  தெளிவாக்கி, அவர் அடைய வேண்டிய சிறந்த குணங்களைச் சுட்டிக் காட்டுகிறது.

இறையனுபவத்தில் வளரும் வழிமுறைகளைக் கற்றுத் தருகிறது.

இறையனுபவத்தின் பால் ஈர்ப்பையும், அதில் தீராத வேட்கையையும் உருவாக்குகிறது.

இறையனுபவத்தில் தோய்ந்து அக மகிழவும்,  அவரைக் காண வேண்டும் எனும் வாஞ்சையையும் பெருக்கமாகப் புரண்டு வரச் செய்கிறது.

இறையடியவர் உறவிலும் தொடர்பிலும்  மனம் மகிழச் செய்கிறது.

அந்தமாக இறைமையில் சரணடைதல், பக்தியில் திளைத்தல், இறையடியவராக மறுரூபமாதல், இறைமையில் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றை  முறையாகக் கூறி இறைப் பாதையில் பயணிக்க வழி காட்டுகின்றது. 

2 கருத்துகள்: