திங்கள், 8 மே, 2017

மனித சிந்தனையில் ஏற்படுத்தப்படும் மயக்கங்கள்.

மனித சிந்தனையில் ஏற்படுத்தப்படும்  மயக்கங்கள்.

Ivan Pavlov - (1849 - 1936) 

சில கேள்விகள் :


🔸 மனிதர்களின் சிந்தனை மற்றும் நடத்தையைக் கட்டுப்படுத்த முடியுமா?
🔸பொதுப்புத்தி எப்படிக் கட்டமைக்கப்படுகின்றது?
🔸நமது தேவைகள், விருப்பங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன?
🔸 நல்லது, சிறந்தது, மேன்மையானது அல்லது தீமையானது, இழிவானது கீழ்மையானது என எப்படித் தீர்மானிக்கிறோம்?

Ivan Pavlov அவர்களின்  நடத்தைச் சார்ந்த ஆய்வின் சாரம்.


ஒரு எதிர்பார்க்கப்படும் நிகழ்வை உருவாக்குவதற்கு மற்றொரு துணை நிகழ்வை ஏற்படுத்துவதன் மூலம் விரும்பும் விளைவை அடைய முடியும்.


உதாரணம்.

எதிர்பார்க்கும் நிகழ்வு : மக்கள் மனதைப் பிரச்சினையிலிருந்து திசைதிருப்புதல்.

துணை  நிகழ்வு : ஆபாசமான காட்சிகள், பாடல்கள், குற்றப் பின்னணி உடையப் பரபரப்பு செய்திகளைக் கசியவிடுதல்.


The Pavlo's Classical experiments on Dog's 


பாவ்லோவ் நாயின் உணர்வுகள் மற்றும் நடத்தைகளைத் தொடர்  நிகழ்வுகளின் ஊடக கட்டுப்படுத்த முடியும் என்பதைப்  பரிசோதனைகள் மூலமாக உறுதிப்படுத்தினார்.

நல்ல இரம்மியமான சூழல் கொண்ட அறையில் ஒரு நாய் அடைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சமயத்தில் அறையின் கதவு திறக்கப்பட்டது.
மணியின் ஓசை எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து சுவையான உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு நிகழ்வின் போதும் அதின் உமிழ்நீர் அளவு பதிவு செய்யப்பட்டது.

இந்தப் பரிசோதனை  தொடர்ந்த சில நாட்கள் கடந்த உடன் அறைக் கதவு திறக்கப்படும் போதே, மணி ஒலி கேட்டவுடன், உணவு அளிக்காமலேயே நாயின் உமிழ்நீர் முழு அளவை எட்டியது.

இதன் மூலமாக ஒரு துணை நிகழ்வின் வழியாக (கதவைத் திறத்தல், மணி ஓசை ஏற்படுத்துதல் -(Neutral stimulus), போன்ற தூண்டுதல்கள் வழியாக  நாயின் நடத்தையைக் (உமிழ்நீர் நீர் - Biological stimulus) கட்டுப்படுத்த முடியும்.


John.S.Watson 1920 ம் ஆண்டில் இப்பரிசோதனை அடிப்படையில் மனிதர்களின் சிந்தனை மற்றும் நடத்தையைக் கட்டுப்படுத்தும் ஆய்வை (Little Albert experiment) மேற்கொண்டார்.

அந்த ஆய்வின் நீட்சியே   மனிதர்களின் சுய சிந்தை, நடத்தைத் தன்மை கடடுப்படுத்தப்பட  தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

🔸வர்த்தக  விளம்பரங்கள்
🔸தனி மனித பிம்பங்களை கட்டமைத்தல்
🔸கருத்துருவாக்கம்
🔸கல்வி பாடத்திட்டங்கள் /பயிற்றுவிக்கும் முறைகள்.
🔸புத்தகங்கள், பாடல்கள், திரைப்படங்கள், சமூக வலைத்தளங்கள்,  விழாக்கள்

பயன்படுத்தப் படுகின்றன. இதில் குறிப்பாக இசை, மன உணர்வைத் தூண்டும் ஓசைகள், இயற்கை காட்சிகள், பாலுணர்வை ஈர்க்கும் தன்மைகள், மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், மனதை வருடும் உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் என மனதை மயக்கும் தூண்டுதல்கள் (Neutral Stimulus)  முதன்மைப் படுத்தப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக நாம் வாழ்க்கை முறை, வாங்க வேண்டிய பொருட்கள், உணவு, உடை, தொடங்கி இது நல்ல தேசம், இந்த மக்கள் கூட்டம் வன்முறையாளர்கள்,   குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் தீவிரவாதிகள்  என மிக நுணுக்கமாக்க  நமது சிந்தனை  கட்டமைக்கப்படுகிறது. நம் சுய சிந்தனை மயங்கி பொதுப்புத்தியை சார்ந்து முடிவுகளை எடுக்கிறோம்.

வரும் காலங்களில் இந்த மாய பிம்பங்களை உடைத்து, பின்னப்படும் வலைகளைக் கடந்து உண்மையை உணர பகீர பிரயத்தனம் தேவை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக