சனி, 4 ஏப்ரல், 2020

புதுப்பித்தல்

கவனித்துப் பார்ப்போம்




Khasab இல் நான் பணிபுரிந்த சாலைத் திட்டப்பணிகள் December மாதத்துடன் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்காக முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. Feburaury வரை திட்டப் பணிகளின் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து ஒப்படைத்தேன்.

இங்குப் பணி புரிந்த 21 மாதங்கள் பல மறக்க முடியாத அனுபவங்களை உள்ளடக்கியது. நான் பொறுப்பேற்கும்போது திட்டப்பணி நெருக்கடியும் சிக்கலுமான நிலையிலிருந்தது. தொடர்ந்து பல கூடுகைகள், பேச்சு வார்த்தைகள் நிகழ்த்தினோம். அதின் பலனாக அனைவர் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டப் பணியை  வெற்றிகரமாக முடிப்பதற்குக் கடவுள் உதவினார்.



இந்தக் காலகட்டத்தில்  மிக அருமையான பல புதிய நண்பர்கள் கிடைத்தனர். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பல உணர்வுப்பூர்வமான பிரிவுபச்சார நிகழ்வுகள்!

நாம் நெருங்கிப் பழகும் ஒவ்வொருவருடனும் ஏதோ ஒரு வகையில் ஒரு உணர்வுப்பூர்வமான பந்தம் நிகழ்ந்து விடுகிறது.




Khasab இல் என்னை அன்புடன் நேசித்துக் கவனித்துக் கொண்டவர்கள் அதிகம்.  Khasab Prayer fellowship பல மாநில மக்கள் ஒன்று கூடி பங்கு பெறும் ஐக்கியம். அது ஒரு Extended family போல இருந்தது. ஒரு நாட்டின் எல்லைகளைக் கடக்கும் போது அதன் மாநிலங்களின் எல்லைகள் மறைந்து போகின்றது.



வளைகுடா நாடுகளில் ஒமான் பெரிய நிலப்பரப்பு உடையது. Khasab Oman ன் வடக்கு எல்லை. (UAE border) என்றால் Salalah தெற்கு எல்லை. (ஏமன் Border). இப்போது எனது புதிய திட்டப்பணி Salalah க்கு அருகில் உள்ளது. Khasab to Salalah ஏறக்குறைய 1600 Km தூரம். Khasab இல் இருந்து விமானம் மூலம் Muscat வந்து, பின்பு Muscat இல் இருந்து Car இல் Salalah வந்து சேர்ந்தேன்.



Muscat to Salalah  Car இல் பயணிப்பது இது இரண்டாவது முறை. ஏறக்குறைய 1000 km தூரம். அவாந்திரமான பாலைவனம் வழியாகப் பயணிப்பது வித்தியாசமான அனுபவம்.

இன்றைய இக்கட்டான வாழ்க்கைச் சூழலில் புதிய பணியின் பொறுப்பை Salalah வில் March மாத இறுதியில் ஏற்றுக் கொண்டேன்.

தற்போது அரசாங்கத்தின் அமைப்புகளிடமிருந்து Carona குறித்து  விழிப்புணர்வு அறிவிப்புகள் குறுஞ்செய்திகளாகத் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

சாலைகளில் வாகன நெருக்கடி முற்றிலுமாக இல்லை. அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மட்டும் வழமையாக இயங்குகின்றன. எந்த உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை. பொருட்களின் விலையிலும் ஏற்றமில்லை.

உணவு விடுதிகள் இயங்குகின்றன. ஆனால் "Take away" முறைமை. மிக மிக அவசியமான அலுவலகங்கள் மட்டும் இயங்குகின்றன. 30% ஊழியர்கள் மட்டும் "Rotation" முறையில் பணிக்கு வருகின்றனர். பெரும்பாலான பணிகள் "On line" வழியாகத் தொடர்கின்றது.

மசூதி, ஆலயம், கோவில் வழிபாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டத்தால் அலைமோதும் கடற்கரை மணல் வெளி வெறுமையாக இருக்கின்றது.

நள்ளிரவு வரை மூச்சுத் திணறும் கூட்டத்துடன் உறங்காது விழித்திருக்கும் வணிக வளாகங்கள் அடைபட்டு மூர்ச்சையாகிக் கிடக்கின்றன.

வளைகுடா நாட்டில் வசிக்கும் பிறநாட்டினரில் பெரும்பான்மையினர் குறைந்த வருவாய் ஈட்டும் தொழிற்பிரிவினரே.

தற்போதைய இக்கட்டான சூழலும், தொடர்ந்து  குறைந்து வரும் எண்ணெய் விலையும் பொருளாதார மந்தநிலை நோக்கியே உலகத்தை நகர்த்துகிறது போலத் தோன்றுகிறது. இதன் தொடர் விளைவாக உலகளவில் எங்கும் பெருமளவில் வேலையிழப்பு மற்றும் ஊதிய குறைப்பும் நிகழும் என மதிப்பிடப்படுகிறது.

நோயின் அச்சத்தைவிட எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமற்றத் தன்மையே அதிக கவலையைத் தருகிறது. உலகம் செயல்படும் முறைமையில் பல மாற்றங்கள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இப்போது அலுவலக வேலைப் பணி நேரம் குறைக்கப்பட்டதால் ஓய்வு நேரம் அதிகமாக கிடைக்கிறது. TV பார்க்கும் நேரம் சொற்பமே. Internet, Social media வும் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. Online இல்  News Paper மட்டும் கொஞ்ச நேரம் வாசிப்பதுண்டு.

புத்தகங்கள் வாசிப்பு. உணவு சமைத்தல், துணி துவைத்து Ironing, கொஞ்சம் இசை, குடும்பத்துடன் Video Chat, நண்பர்களுடன் உரையாடல் எனப் பொழுது மெதுவாகச் சென்றாலும் அழகாகவே போகின்றது. ஒவ்வொன்றையும் ஈடுபாட்டுடன் இரசித்துச் செய்ய முடிகிறது. Virtual World ஐ விட நிஜ வாழ்வு அருமையானது.

சில எதிர்பாராத சம்பவங்களின் விளைவாக எனது தனிப்பட்ட மனநிலை கடந்த சில மாதங்களாக எழுதுவதற்கு உகந்ததாக இல்லை. காலம் ஒரு அற்புதமான மருந்து. நூல்கள் வழியாகக் கற்பது மறந்து போகலாம். வாழ்க்கை அனுபவங்கள் கற்றுத் தருவது  வலி தந்தாலும் அவை அருமையானவை. அது சீர்திருத்துகிறது. உயிரோடும் உறைந்துவிடுகிறது.

இப்போதைய சூழலில் நல்ல நூல்களை வாசிப்பதும் எழுதுவதும் மனதுக்கும் ஆரோக்கியமாக இருக்கும் என நம்புகிறேன். எழுதுவது என்பது ஆன்மாவோடு உரையாடுவது.




தற்போது பல செய்திகள் படிக்கும் போது, கேட்கும் போது மிக வருத்தத்தைத் தந்தாலும் நமது கைக்கு மீறி நடக்கும் நிகழ்வுகளைக் கவனித்துப் பார்ப்பதைத் தவிர வேறு வழி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

நதி நீர் மாசு குறைதல், பல ஆயிரக்கனக்கானை டன் எடை திடக்கழிவுகள் குறைவு, காற்றில் நுண்துகளின் அளவு குறைதல், மதுபானக் கடைகள் மூடல், கட்டற்ற நுகர்வின் கட்டுப்பாடு, விபத்துக்களில் நிகழும் உயிரிழப்புகள் அற்ற பத்து நாட்கள்.., எனக் கண்ணுக்குப் புலப்படாமல் பல நன்மைகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது

இவையனைத்தையும் விட வாழ்க்கைக்கு இன்றியமையாதது எது?  வாழ்விற்கு அத்தியாவசியமான பணியாளர்கள் யார்? என்பதையும்  இந்தச் சூழல் அற்புதமாக அடையாளம் காட்டுகின்றது.

இந்த அமைதியான ஓய்வில் எது முக்கியமான தேவை?

இயற்கை சொல்ல விரும்பும் சேதியைக் கேட்கும் காதுகள் இருந்தால் நன்றாக இருக்கும். "பூமி மனிதனுக்கானது மட்டுமல்ல ; மனிதனுக்காகவும் படைக்கப்பட்டது." எனும் ஒலி சன்னமாகக் கேட்கிறது.

நம்மைச் சுற்றி நிகழ்வதைத் தெளிவாகக் காண்கிற கண்களும் உணர்கிற இதயமும் இருந்தால் அது இன்னும் அதிக பாக்கியமுள்ளவை எனத்தான் தோன்றுகிறது.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


6 கருத்துகள்:

  1. பணிச் சூழல், இட மாற்றம் ஆகியவற்றால் ஏற்பட்ட இடைவெளி என்பதை அறிந்தோம்.

    இங்கும் ஊரடங்குச் சட்டத்தால் நீங்கள் விவரித்திருப்பது போன்ற நிலைதான். எல்லாம் சரியாகி நல்லது நடக்குமென நம்புவோம்.

    /Virtual World ஐ விட நிஜ வாழ்வு அருமையானது./ ஆம். சிந்திக்க வைக்கின்றன தங்களது பல வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி மேடம்.

      உலகம் முழுவதும் நிலவும் இந்த நெருக்கமான சூழல் நீங்கி மீண்டும் இயல்பான வாழ்க்கை தொடர வேண்டும். எல்லாம் நன்மையாக முடியட்டும்.

      நீக்கு