செவ்வாய், 3 செப்டம்பர், 2019

புற்றுநோய் விழிப்புணர்வு

புற்றுநோய் எதிர்த்து போராடுபவருக்கு உதவுவது எப்படி?




இன்றைய அவசர உலகில் அதிகமான பேர்கள் புற்றுநோயின் பாதிப்புக்கு உள்ளாகிறனர்.

புற்றுநோய் பாதிப்பு சிறு குழந்தை முதல் முதிர் வயதினர் வரை அனைவரையும் தாக்குகிறது.

புற்றுநோய் குறித்து முறையான தகவலும் விழிப்புணர்வு தேவை. எனது இரண்டாவது சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 42 வயதில் மறைந்தார். சற்று கவனக்குறைவாக இருந்ததால் இந்த மாபெரும் இழப்பு. 

புற்றுநோய் சிகிச்சையில் மருத்துவர்களின் ஆலோசனையை அப்படியே பின்பற்ற வேண்டும். கால தாமதம் கூடாது.


புற்றுநோய் என்பது என்ன?
 


உடலின் மரபணுக்களில் சேதம் ஏற்படுவதால் புற்றுநோய் ஏற்படுகிறது. இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று  உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் (Tissues) மிகைப் பெருக்கம் ஏற்படுகிறது. இக்கட்டிகள் ஏனைய உடற்ப் பகுதிகளுக்கும் பரவும் ஆற்றல் கொண்டிருந்தால் அவை புற்றுநோய் கட்டிகள் எனப்படும். இவை உடலின் இருக்கும் பாகத்தை வைத்து எந்த வகை புற்றுநோய் எனப் பெயரிடப்படுகிறது.

புற்றுநோய் ஏற்படும் காரணம்


1. புகையிலை - 22%
2. உடல்பருமன் மற்றும் உடற்பயிற்சி இல்லாமை - 10%
3. அளவுக்கதிகமான மது 6%
4. பாரம்பரியம் 5%
5. செயற்கை உணவு, வாழ்க்கை முறை, மன அழுத்தம்
6. கதிர்வீச்சு 
7. சுற்றுச் சூழல் மாசுபாடு
8. சில நோய்மை (Hebatitis C)

உடலில் ஆண்களைப் புற்றுநோய் அதிகமாகப் பாதிக்கும் பகுதி

நுரையீரல் (Lungs)
வாய் (Oral)
வயிறு பகுதி (Stomach)

உடலில் பெண்களைப் புற்றுநோய் அதிகமாகப் பாதிக்கும் பகுதி

மார்பகம் (Breast)
கர்ப்பப்பை வாய் (Cerivial)
வயிறு பகுதி (Stomach) 

புற்றுநோய் தாக்குதலுக்குள்ளாவோர் மனதாலும், உடலாலும் அதிகம் பாதிப்பு அடைகின்றனர். அவர்கள் மனநலம் பாதுகாக்கப்பட வேண்டும். உடல் நலம் மேம்படும் சூழலை உருவாக்க வேண்டும்.  Ms. Kamini Pradhan (Patientsengage.com) எனும் புற்றுநோய் எதிர்ப்பு போராளி புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவர்க்கு உறவுகளும், நட்புகளும் எவ்விதம் உதவ வேண்டும் என அருமையாக எழுதியுள்ளார்.

அதன் சுருக்கம்

I. மனநலம் / உணர்ச்சி மேம்பாடு (Mental / Emotional Support)



1. அரவணைப்பு  (Acceptance) 


புற்றுநோய் ஏற்படுத்தும் தாக்கங்களை அறிந்து, புரிந்து அவர்களை அன்புடன் அரவணைத்துக் கொள்ள வேண்டும். இது அவர்கள் சிறந்த சிகிச்சையை முழு மனதுடன் எடுத்துக் கொள்ள உதவும்.

2. நேர்மறை (Positivity)


நேர்மறையான எண்ணங்களால் மனம் நிறைந்து இருக்க வேண்டும். நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளால் நோயாளர் மற்றும் உடனிருப்பவர்கள் மனதை வலிமையாக வைத்துக்கொள்வது முக்கியம்.  

கால ஓட்டத்தில் "இதுவும் கடந்து போகும்" என முழுமையாக நம்ப வேண்டும். எல்லா எதிர்மறை  எண்ணங்களும் சமுத்திரத்தின் ஆழத்தில் வீசியெறிய வேண்டும்.

3. சிகிச்சை சாதாரணமானது (Normal Treatment)


புற்றுநோய் சிகிச்சை சாதாரணமான நடைமுறை தான். கவனமாக இருக்க வேண்டும். ஆனால் பீதியடையத் தேவையில்லை. நோயாளி எவ்விதம் இருப்பது சௌகரியம் என எண்ணுகிறாரோ அவ்விதம் வாழ உதவுங்கள். ஒருபோதும் அவர் தன்னை ஒரு சுமையாக உணரக்கூடாது.

4. அன்பு மற்றும் கவனிப்பு (Love & Care)


புற்றுநோய் எதிர்ப்பு போரில் அன்பும் கவனிப்பும் மிக முக்கியம்.  சலிப்பு எட்டிகூட பார்க்கக் கூடாது. இந்தப் போரில் நாம் அவருடன் இனைந்து உள்ளோம் என்பது நமது அன்பான நடவடிக்கையால் வெளிப்படட்டும். தான் மிக மதிப்புமிக்க முக்கியமானவர் என்பது அவர் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும்.

5. மகிழ்ச்சி (Cheerful)


சிகிச்சை காலம் முழுமையும் மகிழ்ச்சியாக இருத்தல் முக்கியம்.  அவருக்குப் பிடித்த நபர்களோடு இருக்கட்டும். பிடித்த படங்கள்,நேர்மறை சிந்தையைத் தூண்டும் நூல்,  நகைச்சுவை,  சிரிப்பு என மனதை இலகுவாக்கும் சூழ்நிலை உருவாக்க வேண்டும்.

II. சூழ்நிலை உதவி (Environmental & Physical Support)



1. சுத்தம் (Cleanliness)


அவரது இருப்பிடத்தின் சுத்தம் மிக மிக முக்கியம். அவரது நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால் எளிதில் தொற்றுநோய் தாக்கும் அபாயம் உண்டு. நோய்மை உடையவர் அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

2. நீர் (Water)


குறைந்தபட்சம் 3 முதல் 4 லிட்டர் நீர் பருக வேண்டும். உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் நீக்கப்பட இது தேவை. சுத்திகரிக்கப்பட்ட நீரின் தூய்மை உறுதி சொல்ல முடியாது.  நீரைக் கொதிக்க வைத்துக்  குடித்தல் சிறந்தது.

3. மருந்து (Medicine)


மருந்து,மாத்திரை, ஊசி இவை குறிப்பிட்ட சமயத்தில் சரியாக முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நேரம் முக்கியத்துவம் வாய்ந்தது. 

4. உணவு முறைமை (Diet)


உணவு சிறிது சிறிதாக அடிக்கடி சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் அதிக உணவு உண்ணக்கூடாது. உணவை வீட்டில் வைத்து புதிதாக (Fresh தயாரித்தல் அவசியம். சமைக்க மற்றும் சாப்பிட பயன்படுத்தும் பாத்திரம் தூய்மையாக இருக்க வேண்டும். பாத்திரங்கள் சுடுநீர் கொண்டு சுத்திகரித்தல் வேண்டும்

மருந்தின் வீரியத்தால் நோய் எதிர்ப்புத் திறனை உடல் இழக்கும். அதை ஈடுகட்டக் குறிப்பிட்ட உணவு வகைகளைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

1. Citrus Fruits (ஆரஞ்சு, திராட்சை,  எலுமிச்சை, நெல்லி)
2. Red bell Pepper (மிளகு)
3. Brocolli
4. Garlic (பூண்டு)
5. Ginger (இஞ்சி)
6. Yogurt
7. Almonds (பாதாம்)
8. Spinach (கீரை - இலட்சக்கட்டை)
9. Turmeric (மஞ்சள்)
10. Green Tea
11. Papaya (பப்பாளி)
12. Kiwi
13. Chicken Soup
14. Sunflower Seeds
15. Shell fish (நண்டு, இறால், Lobstere Mussels) 

இவை நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5. ஈடுபாடு (Activity)


நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி, தியானம்,  இறை வேண்டல், தொழுகை இவை மனதை உடலை மேம்படுத்தும். சிரமம் இருப்பினும் இதை ஈடுபாடுடன் செய்தல் மிக நல்லது. இதைச் செய்ய ஊக்கப்படுத்துதல் வேண்டும்.

6. பார்வையாளர் (Guest)


யாரைச் சந்திக்க வேண்டும் என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும். வற்புறுத்தக் கூடாது. 

நோய்மை உடையவரை அருகில் சென்று பார்க்க அனுமதிக்கக் கூடாது.

பார்வையாளர்கள் அறைக்குள் காலணி அணிந்து செல்ல அனுமதிக்க கூடாது.

பூங்கொத்து நோய்த் தொற்று ஏற்படுத்தும். எனவே அதைத் தவிர்க்க வேண்டும்.

சில குறிப்பிட்ட நபர்களைச் சந்திக்க நோய்வாய்ப்பட்டவர் விரும்ப மாட்டார். அவர்கள் முன்பு தான் இயலாத நிலையில் இருப்பதைப் பார்க்க விரும்ப மாட்டார். அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மனக்கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை. அத்தகைய உறவினர்,  நண்பர்களை ஒரு போதும் சந்திக்க அனுமதிக்கக் கூடாது. 

புற்றுநோய் குணப்படுத்தக் கூடியது.

சரியான நேரத்தில் முறையான சிகிச்சையுடன் மற்றும் குடும்பத்தினர், உறவினர், நட்புகளின் அன்பான அரவணைப்பு இருந்தால் இந்த போராட்டத்தில் வெற்றி பெறலாம்.

4 கருத்துகள்:

  1. ஆம். சரியான நேரத்தில் கண்டறிதல் அதை நேர்மறையான வழியில் புரிந்து கொண்டு பாதிக்கப்பட்டவரை கையாளுதல் அன்பின் வழியில் அரவணைத்து உதவி அவருக்கு நம்பிக்கை ஊட்டுதல்... நோயை இல்லாமல் செய்யும்... கடவுளின் உதவியோடு அணுகினால் விரைவில் குணமடைதல் நிச்சயம்.... நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். சரியான நேரத்தில் கண்டறிதல் மிக முக்கியம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரவி.

      நீக்கு