செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு.

 வெற்றிப் பாதையில் மீண்டும் பயணிக்க உதவும் ஐந்து குறிப்புகள் :




தோல்வி இயல்பானது :


வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தவறுகள் நிகழ்ந்திருக்கலாம்..

அதனால் ஏமாற்றம், தோல்வி, அவமானம் என அது வாழ்க்கையை முடக்கி இருக்கக் கூடும்.

இப்படிப்பட்ட நிர்ப்பந்தமான சூழலில், "வழி தவறி இழந்து போன சிறந்த பாதைக்கு" நாம் மீண்டு வருவது எப்படி?

ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகில் நூறு சதவீதம் தவறே செய்யாதவர்கள் என எவரும் இல்லை.

துயரமின்றி எப்போதும் மகிழ்ச்சியோடு வாழ்ந்த மனிதர் என எவரும் கிடையாது.

வாழ்வில் எல்லோருக்கும் பின்னடைவு உண்டு.

உயர்விலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் சூழ்நிலைகளும் வரும்.

நினைப்பதுபோல் நிகழ்வுகள் நடக்காது.

செல்ல வேண்டிய பாதையைக் கவனக்குறைவால், அலட்சியத்தால் தவற விட்டிருக்கக்கூடும்.



இத்தகையச் சூழலில் எவ்விதம் மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது?

பெரும்பாலோர் நிஜத்தில் தோல்விச் சூழலைச் சந்திக்கும்போது  மனச்சோர்வில் சிக்கித் தவிப்பார்கள். அதிலிருந்து மீண்டு வர இயலாது பலர் வாழ்வைத் தொலைத்து விிடுகின்னர். 

ஆனால் வெகு சிலர் மட்டும் தடைகளைத் தகர்த்து மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புகின்றனர்.

அது எப்படி ஒரு சிலருக்கு மட்டும் சாத்தியமாகிறது?

Eckhart என்பவர் குறிப்பிடும் கருத்து முக்கியமானது :

"மகிழ்ச்சியின்மைக்கு/மனச்சோர்விற்கு முக்கிய காரணம் சூழ்நிலைகள் அல்ல ; ஆனால் அந்த சூழலில் நம்முடைய மனப்பாங்கு ஆற்றும் எதிர்வினையே"

ஆம். எண்ணங்கள் மாறினால் வாழ்க்கையும் மாறும்.

ஒருவர் சந்திக்கும் தோல்வி ஏற்படுத்தும் உணர்வுகளை, அவர் எப்படிக் கையாள்கிறார் என்பதில் தான் அவரது மீட்சி அடங்கியுள்ளது.

வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்குத் தெரிவு செய்தல் (Choices) முக்கியமானது.


வீழ்ச்சியிலிருந்து மீண்டு வெற்றிப் பாதையில் பயணிக்க உதவும் ஐந்து குறிப்புகள் :

1. ஏன் இதைச் செய்கிறேன்? (Write down your Reasons Why?)





ஒரு செயலை ஏன் செய்கிறேன் என்பதைத் தெளிவாக உணர்வது மிக அவசியமானது.

அக் குறிப்பிட்ட செயலைச் செய்ய எதற்காக ஆசை வருகிறது?

அந்த விருப்பத்திற்கு வலிமையான பின்னணி  காரணம் எது?

இதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

விருப்பம் வலிமையாக இருந்தால் தான் எத்தனை தடைகள் வந்தாலும் சோர்வடையாது அச் செயலைத் தொடர முடியும்.

உதாரணமாக

நான் எதற்காகச் சம்பாதிக்கிறேன்?

வசதிகளை அதிகரிக்க அல்ல.

மாறாக குடும்ப உறவுகளின் வாழ்க்கையை மேம்படுத்த.

இந்த நோக்கம் முக்கியம்.

இங்கு அது குழந்தைகளின் வாழ்க்கை முன்னேற்றமாக இருக்கலாம்.

இப்போது வேலையில் எத்துணை கஷ்டம் வந்தாலும் குழந்தைகள் முன்னேற்றம் மனதில் நிழலாடும் போது தொடர்ந்து உழைப்போம்.

இப்போது சில கேள்விகள்!!

நான் ஏன் உடல் நலமாக இருக்க முயல்கிறேன்?

நான் எதற்காக வெற்றியடைய விரும்புகிறேன்?

நான் ஏன் முன்னேற்றமடைய விரும்புகிறேன்?

நான் எதற்காகப் போராடுகிறேன்?

நான் எதற்காக இந்த உறவை மதிக்கிறேன்?

இப்படி, ஒவ்வொரு ஆசைக்கும் பின்பாக உள்ள காரணம், தேடுதல் மிக முக்கியமானது.

இந்த காரணங்கள் இன்றியமையாதது என ஆழமாக உணர்ந்தால் தான் ஒவ்வொரு செயலும் சிறப்பாக அமையும்.

இதற்காகத் தான் இந்தச் செயலை செய்கிறேன் என்பது மனதின் ஆழத்தில் உணர்ந்தால் தான் அதற்காகச் சோர்வின்றி காலை முதல் மாலை வரை ஓடுவோம்.

எந்த தடைகள் வந்தாலும் போராடி முன்னேறுவோம்.

எதிர்ப்புகள் வந்தால் மாற்று வழியில் செல்வதற்குச் சிந்திப்போம்.

ஒருபோதும் அதை விட்டுவிட்டு ஓட மாட்டோம்.

ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு மனதிற்கு நல்லதொரு பிடிப்பு வேண்டும்.

செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சரியான காரணம் வேண்டும்.

2. காலம் மிகக் குறுகியது : (Know that Life is too Short)





காலம் மிகக் குறுகியது என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த வாழ்க்கை ஓர் சிறந்த பரிசு. ஒருமுறை தான் இத்தகைய அனுபவம் கிட்டும். அரிதான இவ்வாழ்க்கையை, அதன் காலத்தை வீணடித்து விடக்கூடாது.  

இந்த குறுகிய காலத்தை அர்த்தமற்ற, அற்ப விஷயங்களுக்காக மனதை அலசலடி பட விடக்கூடாது.

மதிப்பற்ற விஷயங்களில் பொன்னான நேரத்தை வீணடிக்கக்கூடாது.

இதயத்துக்கு பிடித்தமான செயல்களில் மனதை ஈடுபடுத்த வேண்டும்.

நேரத்தின் பொருள் உணர்ந்த மிகச் சிறந்த மனிதர்களோடு நட்பு பேண வேண்டும்.

கொடுக்கப்பட்ட வாழ்க்கைக்கு நன்றியுடையவர்களாக இருத்தல் அவசியம்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்தக் கேள்வி முக்கியமானது.

நான் இறந்தபிறகு எதற்காக இந்த உலகம் என்னை நினைவு கூறவேண்டும்?

இந்த ஆசையை ஆழமாக உணர்ந்தால் நமது வாழ்வின் ஒவ்வொரு நாளும் அர்த்தம் நிறைந்ததாக அமையும்.

3. மனதை நேர்மறையான எண்ணங்களால் நிறைத்தல்: (Feed Your Mind With Positive and Divine Thoughts)




மனம் எப்போதும் நல்ல எண்ணங்களால் நிறைய வேண்டும். 

புத்தகம் வாசிப்பது, நல்ல கருத்து நிறைந்த செய்திகளைக் கேட்பது/ பார்ப்பது, முன்னேற்றம் அடைந்த மனிதர்களின் நடைமுறைகளைப் பின்பற்றுவது என மனம் நல்ல எண்ணங்களால் நிரப்பப் பட வேண்டும்.

முன்னேற்றத்திற்கு உதவும், வளர்ச்சிக்கு வித்திடும் ஒவ்வொன்றையும் நாடி தேட வேண்டும்.

திறமைகளை வளர்க்க உதவும் செயல்களை ஆர்வமுடன் கற்றுக் கொள்ள வேண்டும்.

எதிர்மறை செய்திகளை ஆர்வமுடன் பேசுபவர்கள், பிற மனிதரோடு ஒப்பிட்டுக் குறை சொல்பவர்கள், சிறு சிறு குறைகளை மிகைப் படுத்துபவர்கள், நல்லவற்றைப் பின்பற்ற முடியாது எனப் பேசுபவர்களின் நட்பு மிக ஆபத்தானது.

பெரும்பாலான மனிதர்கள் பின்பற்றும் சாதாரண வாழ்வை விட முன்னேற்றம் அடைந்த மனிதர்களின் வாழ்வை உதாரணமாகக் கொண்டு கற்றுக் கொள்ளுதல் அவசியம்.

4. முன் செல்லுங்கள் : (Move)





தோல்வியில் துவண்டு தேங்கி நிற்காதீர்கள். முன் செல்லுங்கள். உடற்பயிற்சி மனச்சோர்வைக் குறைக்கும் என அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தமுறை மனச்சோர்வு தோன்றினால் Gym செல்லுங்கள். விளையாட்டு மைதானத்தில் ஓடுங்கள். வியர்வைச் சிந்தட்டும். மன இறுக்கம் விலகும்.

உடற்பயிற்சி அனுதின செயலாகட்டும்.

நல்ல உடல் ஆரோக்கியம் மனவலிமை தரும்.

வளையாமல் நேராக நிற்பது, தோள்களை நிமிர்த்தி நடப்பது, கண்களைப் பார்த்துப் பேசுவது என உடலின் செயல்களில் கவனம் தேவை.

உங்கள்  உடல்மொழி மனதை மேம்படுத்தும்.


5. இலக்கு குறித்த தெளிவு :
(Know Where You Want to Go)



எதை நோக்கிப் பயணிக்கிறோம் எனும் புரிதல் முக்கியம்.  அவைகள் தான் நாம் சரியான பாதையில் செல்வதை உறுதிப்படுத்தும்.

எந்த இலக்கை அடைய விரும்புகிறோம் எனக் குறிப்பாகத் தெரிய வேண்டும்.

இலக்கை அடைய எத்தனை காலம் தேவைப்படும்?

இலக்கை  அடைய உதவும் உத்திகள்

இவை நாம் சரியான பாதையில் பயணிக்க உதவும்.

தெளிவான இலக்கு  வீழ்ச்சிகளை எதிர்கொண்டு போராடி மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க உதவும்.



4 கருத்துகள்:

  1. நல்ல பதிவு.

    .....

    பெரும்பாலும் தோல்வியினால் உண்டான வலியின் அளவே அதிலிருந்து மீளும் காலத்தை தீர்மானித்துவிடுகிறது.

    கடுமையான தோல்வியையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு அதைக் கடந்தவர்களயும் பார்த்து ஆச்சர்யப் பட்டிருக்கிறேன்.

    .....

    ராஜன்.சே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் Sir. தோல்வி தரும் வலியின் கால அளவை மன வலிமையே தீர்மானிக்கிறது.
      கருத்துரைக்கு மிக்க நன்றி Sir.

      நீக்கு