வியாழன், 29 ஆகஸ்ட், 2019

பயணிக்காத பாதை

தடம் எங்கே போகிறது?




வாழ்க்கை என்பது அடுத்தடுத்து நாம் எடுக்கும் முடிவுகளிலானது.

Robert Frost அவர்கள் இயற்றிய இந்த புகழ் பெற்ற கவிதை வாழ்க்கையில் நீங்கள் ஒரு சமயத்தில் ஏதாவது ஒரு பாதையில் தான் பயணிக்க முடியும் எனும் வாழ்வியலின் அழகிய உண்மையை எடுத்துக் கூறுகிறது.

இக் கவிதையில் ஒரு கரடுமுரடான வனப் பாதை வழியாக வாசகரைக் கவிஞர் அழைத்துச் செல்கிறார்.

இரு திசைகளில் சாலை பிரிகிறது.

இதில் நாம் ஒரு வழியையோ அல்லது வேறு வழியையோ தெரிவு செய்ய வேண்டும்.

எந்த வழியில் சென்றாலும் எதிர்காலம் இப்படித்தான் அமையும் என எவரும் உறுதியாகக் கூற முடியாது.

மாற்றுப் பாதையில் பயணித்து இருந்தால் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் என்பதையும் முன்கூட்டியே அனுமானிக்க முடியாது.

நல்ல முடிவுகளை எடுக்க நம்மால் இயன்றளவு பிரயத்தனம் செய்யலாம்.

ஆனால் ஒரு மாற்றுப் பாதை எவ்வளவு மோசமாக அல்லது சிறந்ததாக இருந்திருக்கும்  என்பதை ஒருபோதும் அறிய முடியாது.

இத்தகைய குழப்பத்தில் வாழ்க்கையில் மாறி மாறி பயணிப்பது வாழ்க்கைக்கு உகந்ததல்ல, கரடு முரடு எனினும் அவ்வழி தொடர்வதே சால் சிறந்தது என்பதே கவிதையின் சாரம்.

வளமை எனக் கருதி கடினமான சூழலைத் தவிர்த்து ஒரே சமயத்தில் அங்கும் இங்கும் அலையக்கூடாது.

அதுபோல் வாழ்க்கையில் அப்படிப் போயிருக்கலாமே என்றும் ஒருபோதும் வருத்தப்படக்கூடாது.

ஆசிரியர் குறிப்பு :



இராபர்ட் புரொஸ்ட் (Robert Frost, மார்ச் 26, 1874 – ஜனவரி 29, 1963)  அமெரிக்காவின் சான் பிறான்சிஸ்கோவில் பிறந்தார். இலக்கிய விருதான புலிட்சர் விருதினை நான்கு முறை பெற்றுள்ளார்.



பயணிக்காத பாதை

அந்த அடர் வனத்தின்
அருகே இரு திசைகளில்
சாலைகள் பிரிகின்றன

மன்னிக்கவும்.
என்னால்
ஒரே சமயத்தில்
இரு பாதைகளிலும்
பயணிக்க இயலாது

ஒரு பயணியாக
நான் நீண்ட நேரம்
அங்கேயே நின்றேன்

வளர்ச்சி எப்படி அமையுமோ
என என்னால் முடிந்தவரை
ஒரு பாதையின் வளைவு வரை
உற்று அவதானிக்க முயன்றேன்

அதேவிதமாக
மற்றதொரு பாதையையும்
கவனித்தேன்.

அவ்விதம் பார்ப்பது
சரியானதே.

ஏனெனில்
இந்த மாற்றுப் பாதையும்
மற்றதை விடசெழுமையும் அழகும்
நிறைந்ததாக இருக்கிறது.

இந்த மாற்றுப் பாதையில்
அழகான புல்வெளி
நான் விரும்பிய நிறைய வளமைகள்;
இருப்பினும் அந்தச் சாலையிலும்
கடந்து செல்வது பற்றி உண்மையில்
நிறைய யோசித்துக் கொண்டே நின்றேன்

அந்த விடியற்கால வெளிச்சத்தில்
இரு சாலைகளுமே அழகுற மின்னியது

இலைகள் வனப்புடன் இருந்தன
மங்கியோ, பழுத்தோ அவலட்சணமாக இல்லை.

ஓ..,
முதல் சாலையில் போவதா இல்லையா
என முடிவெடுக்க மேலும்  ஒருநாள் யோசித்தேன்

இந்த வழியில் சென்றால் முடிவு எவ்விதம் இருக்கும்?

ஒருவேளை நான் திரும்பி வரக்கூடுமோ?

சந்தேகத்தால் திகைத்து நின்றேன்

எங்கோ; கால காலமாக ;

இவ்விதம் நான் பெருமூச்சுடன் 
சொல்லிக் கொண்டிருப்பேன்

ஒரு காட்டின் அருகே
இரு வேறு திசைகளில் சாலைகள் பிரிந்தன

அதிகம் பேர் தேர்ந்தெடுக்காத;
குறைவாகப் பயணித்த பாதை
ஒன்றை நான் தெரிந்து கொண்டேன்

அதுவே எனது வாழ்வில்
எல்லா வித்தியாசத்தையும் ஏற்படுத்தியது




மூல ஆக்கம் :

The Road Not Taken

(By Robert Froast)


Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;


Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,
And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.
I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.

படங்கள் உதவி : இணையம் மற்றும் நட்பு.

4 கருத்துகள்:

  1. பாதையை தேர்தெடுத்து நம்மை அழைத்து செல்வது கடவுள் என்பதை அறிந்து கொண்டால் புரிந்து கொண்டால் முள்ளும் மலராய் தெரியும். வாழ்க்கை பாதை இன்பமாகும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் இறைமையைப் பாதையின் வழிகாட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டீர்கள். அது போதுமானது கூட. மிக்க நன்றி ரவி.

      நீக்கு