சனி, 17 ஆகஸ்ட், 2019

இறைவனின் இருப்பிடம்

திருவாசகம் - இறைவன் உயிர்களிடத்தில் நிற்கும் நிலை






33. உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற

34. மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள்

35. "ஐயா" என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!



பதப்பொருள் :

உய்ய - நான் மீட்பை அடையும்படி
ஓங்காரம் - ஓம் என்கிற ஒலி.
விமலா - மாசற்றவன் (தூய்மையானவன்)
விடைப்பாகா - இடபவாகனனே (உயிருக்கு நாதன்)
நுண்ணியனே - நுண்பொருள் ஆக இருப்பவனே.

சாரம் :

மனதிலும் எண்ணங்கள் தோன்றுகிறது. நினைவில் நிற்கிறது. அழிகிறது. அவ்வாறே இறைவன் நுண்ணிய பொருளாய் (அணுவாக) உள்ளத்தில் ஓங்காரமாக, (எண்ணங்களாக) இருக்கிறார்.

ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலி இனைந்தது.
 
"அ" என்பது முதல் எழுத்து. தோற்றம் அல்லது படைத்தலைக் குறிக்கிறது.
"உ" என்பது இயங்குதல் அல்லது காத்தலைக் குறிக்கிறது.
"ம்" என்பது முடித்தல் அல்லது அழித்தலைக் குறிக்கிறது.

நான் மீட்பை அடையும்படி என் உள்ளத்தினுள் எண்ணங்களாக நிற்பவனே. 

உன்மையானவனே! மாசற்றவனே! 

உயிரை ஊர்தியாகக் ( வாகனமாக) கொண்டு இயங்குபவனே!

வேத அறிவால் உம்மைக் காண இயலாது.  

அங்கும் இங்கும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நுண்ணிய பொருளே

உமது அருள் இருந்தால் மட்டுமே நீ நுண்ணிய எண்ணங்களாக இதயத்து  இருப்பதை என்னால் உணர முடியும்.


2 கருத்துகள்: